![]() |
பணிச்சுமை: சிறப்புப் பயிற்றுநர்கள் அதிகப் பணிச்சுமையால், ஒரு குறிப்பிட்ட மாணவரை மீண்டும் சந்திக்கக் குறைந்தது ஒரு மாதமாகிறது. இது உள்ளடக்கிய கல்வியின் அர்த்தத்தையே நீர்த்துப்போக வைக்கிறது.
இவர்கள் மாற்றுத்திறன் உடையோருக்கான தனித்துவமான அடையாள அட்டை பெறுவதில் இருந்து அரசின் திட்டங்களைக் கொண்டுசேர்த்தல் என அனைத்து மட்டத்திலும் பணியாற்றுகின்றனர். இதனால் கற்பித்தல் பணியைத் திறம்படச் செய்ய இயலாத சூழலே காணப்படுகிறது.
பொதுப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்றுநர் களுக்கான மாணவர்-ஆசிரியர் விகிதம் ஆரம்ப நிலைக்கு 10:1, உயர் ஆரம்ப நிலைக்கு 15:1 இருக்க வேண்டுமெனக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) வலியுறுத்துகிறது. இதன்படி தமிழ் நாட்டுக்கு 13,000 சிறப்புப் பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில், இந்திய மறுவாழ்வு அமைப்பி னால் அங்கீகரிக்கப்பட்ட 16 கல்வி நிறுவனங்களில் வருடத்துக்கு 700 பேர் சிறப்புக் கல்வியியல் பட்டம் பெறுகின்றனர். மேலும் சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி 1980களிலிருந்து வழங்கப்பட்டுக் குறிப்பிடத்தகுந்த அளவிலான சிறப்புக்கல்விப் பயிற்றுநர்கள் உருவாக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு சிறப்புப்பள்ளிகளைத் தவிர்த்து பொதுப் பள்ளிகளில் உள்ளடக்கிய கல்வியின்கீழ் 1,649 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்று கின்றனர். இவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்வது, போதிய அளவிலான சிறப்புப் பயிற்றுநர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவதே சிறப்புக் குழந்தைகளின் கல்வி வாய்ப்பினை உறுதிசெய்யும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...