தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) புதிதாக அச்சிடப்பட்ட 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு' என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில் நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகவும் வழக்குகள் தேங்கியிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இது நீதித் துறை மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது என்சிஇஆர்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இது திட்டமிடப்பட்ட சதி என்றும் அதிருப்தி தெரிவித்தது.
சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக உங்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு என்சிஇஆர்டி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி செயலாளருக்கு உத்தரவிட்டது. அந்தப் பாடம் இடம்பெற்ற புத்தகத்தை (டிஜிட்டல் மற்றும் அச்சுப் பிரதிகளை) முடக்கவும் உத்தரவிட்டது. புத்தகம் சென்றடைந்த ஒவ்வொரு பள்ளியிலும் அவற்றை பறிமுதல் செய்வது அந்தந்தப் பள்ளி முதல்வர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநரின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தது.
திரும்பப் பெறப்பட்டது: இந்நிலையில் என்சிஇஆர்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் 4-வது அத்தியாயத்தில் 'நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு' என்ற பாடம் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்காக என்சிஇஆர்டி-யின் இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றனர். அந்த முழு புத்தகமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் அந்தப் புத்தகம் தற்போது புழக்கத்தில் இல்லை" என்று கூறியுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...