இயல் : அரசியல்
அதிகாரம்:49.காலம் அறிதல்
குறள் எண்:488
குறள்:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பொருள்:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.
No Pains ; No Gains.
உழைப்பின்றி ஊதியம் இல்லை.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன்.
2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.
பொன்மொழி :
“கனவு காணும் இளைஞன் ஒரு படி முன்னேறுகிறான்; திறனை வளர்க்கும் இளைஞன் இலக்கை அடைகிறான்.”
Thought for the Day :
“Skills turn ideas into action and dreams into reality.”
பொது அறிவு :
1. 200 ரூபாய் நோட்டிற்குப் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
சாஞ்சி ஸ்தூபி (மத்திய பிரதேசம்) .
2. 100 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
ராணி கி வாவ் (குஜராத்)
English words :
1. Resourceful – Finds clever ways to solve problems, சமயோசித புத்தி உடையவர்.
2. Punctilious – Great attention to detail and correct behavior, நேர்த்தியான ஒழுக்கமுடையவர்.
புவியியலும் சுற்றுசூழலும் :
மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.
முக்கிய மலைத்தொடர்கள்:
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்கு தொடர்ச்சி மலை
நீலகிரி மலை
சேர்வராயன் மலை
கல்வராயன் மலை
கொல்லிமலை
ஜவ்வாது மலை
ஏலகிரி மலை ஆகும்
NMMS :
MAT
விதைத் தாவரங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு. வகுப்பு------>துணை வகுப்பு---------> வரிசை.
(1) தலாமிஃபுளோரே-------> பாலிபெட்டலே-------> டைகாட்டிலிடனே
(2) டைகாட்டிலிடனே-------> பாலிபெட்டலே-----------> தலாமிஃபுளோரே
(3) பாலிபெட்டலே---------> டைகாட்டிலிடனே---------> தலாமிஃபுளோரே
(4) பாலிபெட்டலே --------> தலாமிஃபுளோரே-------------> டைகாட்டிலிடனே
விடை: (2) டைகாட்டிலிடனே-------------> பாலிபெட்டலே-------------> தலாமிஃபுளோரே
நீதிக்கதை
“பெரிய இலக்கு”
ஒரு கிராமத்தில் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய சாதனை செய்ய வே ண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த இலக்கை நினைத்தாலே , “இவ்வளவு பெரிய இலக்கை எப்படி அடைவது?” என்று கவலைப்பட்டான்.
ஒருநாள் அவன் ஆசிரியரிடம் தனது கவலையைச் சொன்னான்.
ஆசிரியர் ஒரு சிறிய விதையை க் காட்டி,
“இந்த விதை இன்று ஒரு பெரிய மரமாகிவிடுமா?” என்று கே ட்டார்.
“இல்லை ஆசிரியரே ,” என்றான் சூர்யா.
“அப்படித்தான் பெரிய இலக்கும். ஒரே நாளில் வெற்றியை எதிர்பார்க்காமல், தினமும் சிறிது சிறிதாக உழைத்தால் பெரிய இலக்கையும் அடையலாம்.” என்றார் ஆசிரியர்.
அன்றிலிருந்து சூர்யா தனது இலக்கைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் விடாமுயற்சியுடன் உழைக்கத் தொடங்கினான். தோல்விகள் வந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் முயன்றான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் கனவு நனவானது.
அப்போது சூர்யாவுக்கு ஆசிரியரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:
“பெரிய இலக்கை நினைத்து பயப்படாதே ; அதை அடைய ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அடியை எடுத்து வை .”
🌸 நீதி: பெரிய இலக்கை அடைய பொறுமையுடனும் திட்டமிட்ட முறையிலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். விடாமுயற்சி இருந்தால் கனவும் நனவாகும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...