பொன்மொழி :
ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுபவம். ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு எச்சரிக்கை - கவிஞர் கண்ணதாசன்
பொது அறிவு :
01.அமெரிக்க அதிபர் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?
நான்கு ஆண்டுகள்
02.இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த மற்றும் பழமையான இலக்கிய விருது எது?
ஞானபீட விருது -Jnanpith Award
English words :
Ballot – The vote itself (paper or electronic)
Polling – The act of voting
தமிழ் இலக்கணம்:
இன்று இறந்த கால இடைநிலைகள் என்றால் என்ன என்று பார்ப்போம்
தமிழ் இலக்கணத்தில், ஒரு செயல் ஏற்கனவே முடிந்துவிட்டதைக் காட்டும் இடைநிலைகள் இறந்தகால இடைநிலைகள் (Past Tense Markers) எனப்படும்.
இவை த், ட், ற், இன் ஆகிய நான்கும் ஆகும். இவை பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் உணர்த்துகின்றன.
முக்கியமான இறந்தகால இடைநிலைகள்:
த்: படித்தான் (படி+த்+த்+ஆன்)
ட்: உண்டான் (உண்+ட்+ஆன்)
ற்: பெற்றான்
இன்: ஓடினான் (ஓடி+ன்+ஆன்)
இன்னும் சில எ. கா
சென்றான்: செல் + ற் + ஆன் (ற் - இறந்தகால இடைநிலை)
கற்றாள்: கல் + ற் + ஆள் (ற் - இறந்தகால இடைநிலை)
பார்த்தான்: பார் + த் + ஆன் (த் - இறந்தகால இடைநிலை)
அறிவியல் களஞ்சியம் :
பிறக்கும்போது குழந்தைகளின் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், வளர வளர அவை இணைந்து பெரியவர்களில் 206 எலும்புகளாக மாறுகின்றன.
மார்ச் 23
உலக வானிலை நாள் (World Meteorological Day);
உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.
பகத் சிங், சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார்,

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்
பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.
இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.
நீதிக்கதை
ஏமாந்த சிறுத்தை
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
23.03.2026
⭐இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள பொது இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
⭐குஜராத்தில் யோகா மையம் நடத்தி, கள்ள நோட்டுகளை அச்சிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
⭐பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இந்தியா தண்ணீரைத் தர வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சுகிறது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀 சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'ரோர் 26' என்ற பெயரில் பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை நேற்று சென்னையில் நடத்தியது.
🏀இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.
Today's Headlines
⭐ In response to attacks by Israeli and American forces, Iran has announced that it will carry out attacks targeting public places around the world.
⭐ In Gujarat, a gang of six people who were running a yoga center and printing counterfeit currency has been arrested.
⭐ Pakistan is facing a potential water crisis. Meanwhile, it has urged India to release water by implementing the Indus Water Treaty.
*SPORTS NEWS*
🏀 The Chennai Super Kings (CSK) management organized a grand reunion event in Chennai yesterday called Roar 26,bringing together former and current players.
🏀 The Indian team has decided to tour Ireland and play two T20 matches.