இயல் : அரசியல்
அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:463
குறள்:
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
பொருள்:
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
Knowledge is power.
அறிவே ஆற்றல்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.
2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.
பொன்மொழி :
மழை பெய்தால் மண் செழிக்கும்; நல்ல எண்ணம் இருந்தால் வாழ்க்கை செழிக்கும்.
Thought for the Day :
Every raindrop is a promise of a greener tomorrow.
பொது அறிவு :
1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜுலை 18.
2. தமிழ்நாட்டின் மாநில மீன் எது?
அயிரை மீன்.
English words :
Resilient – Recovers quickly, மீண்டு எழுபவர்.
Diligent – Works hard, விடாமுயற்சியாளர்
புவியியலும் சுற்றுசூழலும் :
இமயமலையின் சிறப்புகள்
உலகின் மிக உயரமான மலைத்தொடர்.
இந்தியாவை வடக்கிலிருந்து பாதுகாக்கிறது.
பல முக்கிய நதிகள் இங்கிருந்து தோன்றுகின்றன.
இந்தியாவின் காலநிலையைச் சீராக்க உதவுகிறது
NMMS :
SAT
___________________ என்ற சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணைத்துக்கொள்கிறது.
(1) நெமடோடா
(2) பிளாஸ்மோடெஸ்மாட்டா
(3) எக்கைனோடெர்மேட்டா
(4) சைடோசால்
விடை: (2)பிளாஸ்மோடெஸ்மாட்டா
நீதிக்கதை
வெள்ளத்தில் உயிர் காத்த வரீர்கள்
தொடர்ந்து பெய்த கனமழையால் நகரம் ஒன்றின் தாழ்வான பகுதி முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளிலேயே சிக்கிக்கொண்டனர். பள்ளி, தெருக்கள், வயல்கள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருந்தது.
அந்தச் சமயத்தில், அந்நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலரும்,இளைஞர் குழுவினரும் தன்னார்வமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.படகுகளின் உதவியுடன் வீடுவீடாகச் சென்று, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு வீட்டின் மாடியில் ஒரு பாட்டியும், இரண்டு சிறிய குழந்தைகளும் உதவிக்காக காத்திருந்தனர். அவர்களைப் பார்த்த இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் படகை செலுத்திச் சென்று, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட மக்கள் நன்றியுடன் கண்ணீர் மல்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரும் அவர்களின் மனிதநேயச் சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அன்றைய தினம் அந்தப் பகுதி மக்கள் ஒரு உண்மையை உணர்ந்தனர். ஆபத்து நேரத்தில் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களே உண்மையான வீரர்கள் என்பதை அனைவரும் புரிந்துக்கொண்டனர்.
நீதி:
ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது உயர்ந்த மனிதநேயப் பணியாகும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...