Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாக்கெட் உணவுகளுக்கு எச்சரிக்கை லேபிள் – FSSAI புதிய திட்டம்

 

பாக்கெட் உணவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை லேபிள்? – FSSAI புதிய திட்டம்

அதிக அளவு சர்க்கரை, உப்பு அல்லது செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் கட்டாயமாக சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள் இடம்பெற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது.

'HIGH SUGAR', ‘HIGH SALT', 'HIGH FAT' எச்சரிக்கைகள் பெரிய எழுத்துகளில் இடம்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கவலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள்களை (Red Hexagonal Warning Labels) கட்டாயமாக்கும் புதிய திட்டத்தை FSSAI (Food Safety and Standards Authority of India) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள compliance affidavit மூலம் அறிவித்துள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

சிவப்பு நிற அறுகோணம்: பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் சிவப்பு நிறத்தில் அறுகோண வடிவிலான எச்சரிக்கை லேபிள் இடம்பெறும்.

எச்சரிக்கும் கூறுகள்: தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு (Fat) உள்ளதா என்பதை இது சுட்டிக்காட்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தலையீடு: இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் (Obesity) மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைமுறைப்படுத்தும் கட்டங்கள்

முதற்கட்டம் (Phase I): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்தான ஊட்டச்சத்துக்கள் (உப்பு, சர்க்கரை, கொழுப்பு) அதிகம் உள்ள உணவுகள் மற்றும் குறிப்பிட்ட குளிர்பானங்கள் மீது இந்த லேபிள் கட்டாயமாக்கப்படும்.

இரண்டாம் கட்டம் (Phase II): ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மட்டும் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களுக்கும் இந்த எச்சரிக்கை முறை விரிவுபடுத்தப்படும்.

விலக்கு அளிக்கப்பட்டவை

ஒற்றைப் பொருள் கொண்ட உணவுப் பொருட்கள் (Single-ingredient food products).நெய், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, வெல்லம் மற்றும் தேன்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive