![]() |
| மரியா மாண்ட்டிசோரி |
இயல் : அரசியல்
அதிகாரம்:49.காலம் அறிதல்
குறள் எண்:484
குறள்:
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
பொருள்:
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், உலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
Blessings are not valued till they are gone
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.
பொன்மொழி :
“கைகளில் கைத்திறன், மனதில் நம்பிக்கை, செயல்களில் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.”
Thought for the Day :
“Don’t wait for opportunities; build skills that create opportunities.”
பொது அறிவு :
1.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படுவது எது?
மதுரை.
2. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படுவது எது?
பாளையங்கோட்டை.
English words :
1)Benevolent – Well-meaning and kind, நற்குணமுள்ளவர் / தாராள மனப்பான்மை உடையவர்.
2)Astute – Sharp and shrewd, கூர்மையான அறிவுடையவர்.
புவியியலும் சுற்றுசூழலும் :
தமிழ்நாட்டின் புவியியல் தமிழ்நாடு இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது.
வடக்கில் ஆந்திரப் பிரதேசம், வடமேற்கில் கர்நாடகம், மேற்கில் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கிழக்கிலும் தென்கிழக்கிலும் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
NMMS :
MAT
எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது ________________________ ஆகும்.
(1) அசௌர்யா
(2) சத்யா
(3) அகிம்சை
(4) அரிக்கிரகா
விடை: (3) அகிம்சை
ஆகஸ்ட் 31
மரியா மாண்ட்டிசோரி அவர்களின் பிறந்தநாள்
மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.
நீதிக்கதை
🍚 நீதிக்கதை : “அலை பே சி இல்லாமல் உணவு”
ஒரு சிறிய நகரத்தில் நிகில் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சாப்பிடும் நேரத்தில் அலைபேசியில் கார்ட்டூன் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
ஒருநாள் அவன் அம்மா உணவு பரிமாறியபோது, “அம்மா, போனை கொடுத்தால்தான் நான் சாப்பிடுவேன்!” என்றான்.
அம்மாவும் அவன் சாப்பிட வேண்டும் என்பதற்காக அலைபேசியைக் கொடுத்தார்.
நிகில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டே உணவை சாப்பிட்டான். நாள்கள் செல்லச் செல்ல, அலை பேசி இல்லாமல் சாப்பிடவே முடியாது என்ற பழக்கம் நிகிலுக்கு ஏற்பட்டது. உணவின் சுவையையும், அம்மா அன்புடன் பேசுவதை யும் அவன் கவனிக்காமல் போனான்.
ஒருநாள் அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் போனது. நிகில் சாப்பிட மறுத்துவிட்டான். அப்போது அவனுடை ய தாத்தா அவனை அருகில் அழைத்து,
“நிகில், உணவு உன் உடலுக்கு சக்தி தருகிறது. அலைபேசி உன் உணவுக்கு துணையாக இருக்க வேண்டியதில்லை . சாப்பிடும்போது உணவை ரசித்தும், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டும் சாப்பிடக் கற்றுக்கொள்,” என்றார்.
நிகிலுக்கு தன் பழக்கம் புரிந்தது. அன்று முதல் சாப்பிடும் நேரத்தில் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உணவு சாப்பிடத் தொடங்கினான்.
🌱 நீதி:
குழந்தைகள் உணவு சாப்பிடுவதற்காக அலைபேசியை க்கொடுப்பதை விட,
உணவின் முக்கியத்துவத்தையும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தையும் கற்றுக்கொடுப்பது சிறந்தது.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...