தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.
இந்த வழக்கில் முக்கியமான சரத்துக்கள் சுருக்கமாக:

1. பொதுப்பிரிவினருக்கு (OC) TET தகுதி மதிப்பெண் 60% (90) → 50% (75) ஆகக் குறைக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் முக்கிய கோரிக்கை. மேலும் ஏற்கனவே நடைபெற்ற TNTET தேர்வுகளுக்கும் இந்த மாற்றத்தை பின்னோக்கிப் பொருந்தச் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
2. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு: General Category-க்கான 60% தகுதி மதிப்பெண்ணை 50% ஆகக் குறைக்க உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை.
3. TET கட்டாயத் தகுதி என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்துகிறது.
4. In-service teachers-க்கு TET பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி பெற வேண்டிய கடைசி தேதி 31.08.2028 என குறிப்பிடப்பட்டுள்ளது.
5. 2028 வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பது TET மதிப்பெண்ணில் தளர்வு அல்ல. TET-ன் கட்டாயத் தன்மை தொடர்கிறது என்று அரசு கூறுகிறது.
ஆக மொத்தத்தில் பொதுப்பிரிவினர் (OC) தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு மதிப்பெண் தளர்வு கிடையாது என்பதை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...