Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குறுவள மைய பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம்

            பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளது:


60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்

           அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் : இளங்கோவன் புகார்

        சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக .வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார் 

 

TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

       ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண் 29245/2014.

அரபு எண்ணை தமிழ் எண்ணாக்கும் வினா: 10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்

           பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.

PGTRB கலந்தாய்வில் - தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்

           முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற 28-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.

கல்வித் துறை நடவடிக்கை: சீர்காழி அருகே 6 மாணவர்களும் தமிழ் 2-ஆம் தாள் தேர்வு எழுதினர்

                 நாகை மாவட்டம், சீர்காழி அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகள் கல்வித் துறையின் நடவடிக்கையால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வை எழுதினர்.

பிளஸ் 2 வினாத்தாள் 'வாட்ஸ்அப்'பில் அனுப்பிய விவகாரம்: சி.இ.ஓ., அலுவலகத்தில் போலீசார் விசாரணை

           பிளஸ் 2 வினாத்தாள், வாட்ஸ்அப் மூலம் வெளியானது தொடர்பாக, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
 

உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

         தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

அரியானா மாநில பள்ளி மாணவர்களுக்கு 'எலக்ட்ரானிக்' அடையாள அட்டை

         அரியானா மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் அடையாள அட்டை வழங்கும் திட்டம், அடுத்த மாதம் துவங்குகிறது.

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் . தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கப்படுமா?

            பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான, எழுத்து பிழையான கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி டைப்' வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 2 வது கேள்வியில் 'லெட்டின்' அணு எடை தவறாக உள்ளது. 19 வது கேள்வியில் ஓர் அமைப்பு, சுற்றுப்புறத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் மதிப்பு கொடுக்கப்பட்டு, அண்டத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் கேட்கப்பட்டது. அதற்கான விடை தவறாக உள்ளது. 
 

6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும் மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு?

              பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காதது தொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது. 
 

ஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா? -DINAKARAN

            அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகம் என்றால் தான் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனால் அரசின் புதிய  கொள்கைகளால் ஆசிரியர்கள் அந்த மதிப்பை இழந்துள்ளனர்.  
 

'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார்

          கோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்., நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜியை, 'டம்மி' பதவிக்கு தூக்கி அடித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

TET தேர்வை CBSE பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும்

         புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம்

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?

       அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.

விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால் சிக்கல்

          காரைக்குடி: பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பார்கோடு முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை

           பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

TATA சங்க ஊதிய வழக்கு தற்கால நிலை

          8.3.2015 அன்று ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் " ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .


தேர்வு பணியில் இருந்து விடுவித்து கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி

       வாட்ஸ் அப் விவகாரத்தினால் கல்வித்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளன. தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை இடம் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை

* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை: 
 அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப் பள்ளிகள் 3044, மேனிலைப் பள்ளிகள் 2727.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? - அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

         தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

பள்ளிகளில் அம்மை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

       திருப்பூரில், அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால், இதுகுறித்த விழிப்பணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற சட்டப்பிரிவு 66ஏ செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


       சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களே இல்லாத 124 பள்ளிகள்

           ஜம்மு-காஷ்மீரில் உள்ள 124 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்தார்.

கொடுக்கறதே கட்டை சம்பளம்...! இதுல 'டோர் கேன்வாசிங்' வேலையுமா?

           மாநிலம் முழுவதும், பல தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டில், மாணவர்களை, 'வளைக்கும்' பணியில், ஆசிரியைகளை ஈடுபடுத்தி உள்ளது. பள்ளியை சுற்றி உள்ள நகர, கிராமங்களில், வீடு, வீடாக சென்று, 'நோட்டீஸ்' வழங்கி, பள்ளியின் அருமை, பெருமைகளை எடுத்துக்கூறி, மாணவர்களை இழுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளன. இதற்கு, ஆசிரியைகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

தனியார்பள்ளிகளின் கூத்து!!!

          எங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.
 

பள்ளி நிர்வாகிகளை தப்பவைக்க முயற்சியா?

           பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகிகளை தப்பி  வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
 

கிருஷ்ணகிரி பள்ளியில் ஜெராக்ஸ் எடுத்து மோசடி

               ஓசூரை போலவே, கிருஷ்ணகிரியிலும் பிளஸ்2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி  தொடங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. 
 

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு

*கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா? 
*பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா?
*எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?
 
           ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரம் முக்கியம். ஒரு சமுதாயம் அறிவுசார்ந்த, இளமையான, சுறுசுறுப்பான சமுதாயமாக  இருப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது.
 

பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

       பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களைத் தவிர, பறக்கும்படை உள்ளிட்ட பிற அலுவலர்களால் பிடிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்படட தேர்வறை கண்காணிப்பாளரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

1. பேக்கிங்/சமையல் சோடா:

            சமையல் சோடாவானது, மஞ்சள் நிற‌ பற்களை நீக்கி வெண்மையான பற்களை பெற உதவும் எளிய மற்றும் விரைவான வழியாகும். இது பற்களில் உள்ள தகடை ஒழித்து உங்கள் அழகான பற்களை பளபளப்பாக மாற்றுவதோடு வெண்மையான‌ ஒளியையும் தருகிறது. நீங்கள் இதை எல்லாம் பெறுவதற்கு பற்பசை சிறிதளவு, பேக்கிங் சோடா சில தேக்கரண்டி இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். 
 

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

           தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive