Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்2 மாணவர்களுக்கு மே 27ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்


         தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதனை அடுத்து 27 ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்கு முன்பாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளின் வசதிக்காக தினமணி.காம் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வை அணுகுவது எப்படி?


தமிழக அரசு நடத்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், இத்தேர்வை எழுத 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை எளிதாக அணுக உதவும் வகையில் சில ஆலோசனைகள் இங்கே:

முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் அதிரடி மாற்றம்

        பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள், பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல அதிகாரிகள், கூடுதலாக ஒரு பொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்களில், பணிமூப்பு அடிப்படையில், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறப்பதற்குள், பணியிடங்களை நிரப்பினால் தான், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பட்டதாரி, முதுகலை பட்டதாரி , உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமையாசிரியர் பதவியுயர்வு பட்டியல் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் to பட்டதாரி, முதுகலை பட்டதாரி to BRC மேற்பார்வையாளர் பணி மாறுதல் பட்டியல்

Conversion:

HM Panel

ஆசிரியர்கள் கவனத்திற்கு :
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தங்கள் வசதிகாக வெளியிடப்படுகிறது. முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் விடுபட்டு இருந்தாலோ அதற்கு இந்த இணையதளம்  பொறுப்பல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம். இது முற்றிலும் சேவை அடிப்படையில் வழங்கப்படுகிறது .
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு பள்ளிக்கல்வி த்துறையால் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். திருத்தப்பட்ட பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு கலந்தாய்வு தேதி பின்னர் நம்முடைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

 பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை பட்டியல் : 

முதுகலை பட்டதாரி முன்னுரிமை பட்டியல்:
2.ஆங்கிலம் 
4. அறிவியல் 
5. Economics
வெவ்வேறு  பாடம் 
6.Political Science 
7.Geography
வெவ்வேறு  பாடம் 
8.History
9.commerce

பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு.


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ள நிலையில், பள்ளிவாரியாக உபரி ஆசிரியர், காலியிடங்கள் தொடர் பான விபரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு சேர்க்கை: மே 21 முதல் விண்ணப்பம்


வரும் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்வதற்கு மே 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்தாண்டு முதல் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு.


         எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க, அடுத்த கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக துணைக்குழு அமைக்கப்படும்: அமைச்சர்


         கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் கீழ், துணைக் குழுவை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இக்குழு, விரைவில் அமைக்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.

அரசானை 23 செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணை


தொடக்கக்  கல்வித்துறை  சார்ந்த இடைநிலை, பட்டதாரி மற்றும்  தலைமை   ஆசிரியர்கள் ஆகியோருக்கு அரசானை 23 செயல்படுத்தி தர ஊதியம், தனி ஊதியம் மற்றும் சிறப்பு படி வழங்க இயக்குனர் ஆணை . இங்கே கிளிக் செய்து ஆணையை  டவுன்லோட் செய்யுங்கள் . ( GO & Proceeding avail at the bottom of GO, 

அங்கன்வாடி குழந்தைகளுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் முதல்வர்!


அங்கன்வாடி குழந்தைகளுக்கு, இந்த ஆண்டு முதல், இரண்டு வண்ண உடைகள் வழங்கும் புதிய திட்டத்தை, முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:

Action Research - Model


Action Research - Model in Tamil


Action Research - Model in English

தொடக்கக்கல்வி -ஆங்கில வழி வகுப்புகள்- அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.


Click Here & Download Director Proceeding & Proposal Forms

      தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம்   320 பள்ளிகளில் 2012 - 2013 ஆம்  கல்வியாண்டில்  ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 160 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாக 
ஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.

நெருடும் இடைச்செருகல்கள்!

இப்போதெல்லாம் பாடப்புத்தகங்களை ஆசிரியர்களும் மாணவர்களும் படிப்பதைக் காட்டிலும் அரசியல்வாதிகள்தான் அதிகம் படிக்கின்றார்கள் என்பதைத் தற்போது நடைபெற்றுவரும் எதிர்ப்புகளும், எதிர்வினைகளும் தெளிவுபடுத்துகின்றன.

Vellore CEO Instruction to All HMs



 mid¤J muR/efuh£Á/MÂÂuhél® ey/ãÂÍjé/Raã ca®/nkšãiy¥gŸë jiyikahÁça®fS¡F, 

Ñœf©l étu§fis 15.05.2012 khiy 5.45kâ¡FŸ r«kªj¥g£l kht£l¡fšé mYtyf¤Âš x¥gil¡FkhW
mid¤J jiyikahÁça®fŸ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
1) 6 Kjš 10 tF¥ò khzt/khzéa®fë‹ V¥uš 2012 khj¤Â‰fhd tUif¥gÂntL efš ( Xerox Copy) 
2)MÁça®fë‹  V¥uš 2012 khj¤Âfhd tUif¥gÂntL  efš(Xerox Copy)
3)mik¢R¥gâahs®fŸ/MÁçaušyhnjh® V¥uš 2012 khj¤Â‰fhd tUif¥gÂntL efš (Xerox Copy)

MBBS / BDS Apllication - நாளைமுதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.

23 ஆயிரத்து 128 பேர் விரிவுரையாளர் தேர்வில் பங்கேற்பு


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, 154 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அங்கன்வாடி தரம் உயர்வு: முதல்வர் அறிவிப்பு.


2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தலா 2 வண்ண ஆடைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், முதல் கட்டமாக சென்னை, தேனி, திருச்சி, திண்டுக்கல், வேலூரில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கான ஆடைகள் 2ல் இருந்து 4ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் அவர்களின் அறிக்கை பதிவிறக்கம் செய்ய...

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு இனி கட்டணம் அரசே செலுத்தும் - மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவிப்பு.


தமிழ்நாட்டில் உள்ள 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 48000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதற்காக ஊராகப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர் ஒருவருக்கு ரூ.10000/- வீதமும்,
நகர் பகுதிகளிலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர் ஒருவருக்கு ரூ.12000/- வீதம் பயிற்சி கட்டணம் அரசால் செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் 2014 -15  முதல்  ஆண்டொன்றுக்கு 33 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும்.


தொடக்க கல்வித்துறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 34 உதவி தொடக்கக்கல்வி அதிகாரி (ஏ.இ.இ.ஓ.) பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. பி.ஏ. பி.எட். அல்லது பி.எஸ்சி. பி.எட். கல்வித்தகுதி கொண்ட இந்த பதவிக்கு 68,536 பேர் விண்ணப்பித்தார்கள்.

பொறியியல் விண்ணப்ப விற்பனை மையங்கள் எவை எவை?


மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொறியியல் கவுன்சிலிங் சீசன் துவங்கிவிட்டது. மே 11ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை, விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும், பல்வேறான ஊர்களிலுள்ள குறிப்பிட்ட மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
அந்த ஊர்கள் மற்றும் மையங்களின் விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

14ம் தேதி முதல் கால்நடை படிப்புகளுக்கான விண்ணப்பம்.


தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் 4 இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளனசென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட தமிழகத்தில் உள்ள 14 பல்கலை ஆராய்ச்சி மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் இலவச பாடநூல்கள் 2012 - 2013 கல்வியாண்டிற்கு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வழங்குதல்.


பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண். 80207 / இ / இ3 / 2012, நாள்.10.05.2012
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான பட்டியிலுள்ள 1 முதல் 5 வகுப்பு வரையான இலவச பாடநூல்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 
மேலும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தேவையான பட்டியலின் படி 6 முதல் 8 வகுப்பு வரையான இலவச பாடநூல்களை மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஜுன் 4ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.


ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை  அறிவித்துள்ளது.4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்
பணிகள் முடிவடைந்து மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவை அறிவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை திணமணி.காம் வெளியிட உள்ளது.

பி.இ., எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள், மாணவர்களிடையே எழுந்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க மே 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

01.01.2012 முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க உத்தரவு.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 12.05.2012.
தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2012 - 2013 ஆம் ஆண்டு 01.06.2012 அன்று ஏற்படும் உத்தேச காலிப்பணியிடங்களுக்கு 01.01.2012 தேதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர்  பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

DTERT - CCE - உயர் தொடக்க நிலை - அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள்.    .05.2012
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை உயர் தொடக்க நிலையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது மற்றும் இது சார்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்களான  முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி நடைபெறும் இடம் : SIEMAT CONFERENCE HALL, CHENNAI - 06.
பயிற்சி நடைபெறும் நாள் : 16.05.2012.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி விபரங்கள் அறிவுப்பு!


  பொறியியல் கவுன்சிலிங் நடைமுறைகளுக்கான தேதி விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
* மே 11ம் தேதி விண்ணப்ப விநியோகம் துவங்குகிறது.
* மே 31ம் தேதி விண்ணப்ப விநியோகம் நிறைவடைகிறது. அதே தேதிக்குள்ளேயே, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட வேண்டும்.
* ஜுன் 20ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஜுன் 24ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
* ஜுலை 1ம் தேதி, விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
* ஜுலை 3 - 7, தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்(phase 1) நடைபெறும்.
* ஜுலை 8ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
* ஜுலை 9 - ஆகஸ்ட் 12, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive