NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க உத்தரவு


             இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத உள்ளோர், செய்முறை பயிற்சிக்கு, பதிவு செய்து கொள்ள, அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

            இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனி தேர்வர்களும், அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு செய்யாத தனி தேர்வர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

                   அனைத்து தனி தேர்வர்களும், வரும், ஜூன், 3ம் தேதி முதல், 30ம் தேதி வரை, மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, 80 சதவீத வருகை பதிவு உள்ளவர்கள் மட்டுமே, பொது தேர்வுக்கும் அனுமதிக்கப்படுவர்.

               செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்கள், இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்விற்கு கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுகுறித்த விவரங்களை, மாவட்ட கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு பெறலாம். வங்கியில், 125 ரூபாய் செலுத்தி, அந்தந்த கல்வி மாவட்ட அலுவலரது பதவி பெயரில் டி.டி., எடுத்து, கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive