NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாடு முழுவதும் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.



           யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுவதும் 7.5 லட்சம் பேர்  எழுதுகின்றனர். தமிழகத்தில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலை தேர்வை எழுத உள்ளனர். 
 
          மத்திய அரசு பணியா ளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டு தோறும்நடத்தி வருகிறது.முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்க்காணல் தேர்வு என 3 கட்ட தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின் றனர். இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 5ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. ஆன், லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்தது. நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 7.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் விண் ணப்பித்துள்ளனர்.
 
             இந் நிலையில், சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 45 முக்கிய நகரங்களில் 2,500க்கும் மேற்பட்ட மையங்களிலும், தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் 96 மையத்திலும் இன்று நடைபெறுகிறது. யுபிஎஸ்சி வழக்கமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் காலி பணியிடங்களுக்கு சிவில் சர்வீஸ்தேர்வை நடத்து கிறது. ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக யுபிஎஸ்சி ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வுடன், ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப்பணி தேர்வையும் நடத்துகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive