Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லோக்சபா தேர்தல் பணி: 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் தயார் : கம்ப்யூட்டரில் பதிவு பணி தீவிரம்

           வேலூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 13 ஆயிரம், அரசு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களது, சுய விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.

          வரும், லோக்சபா தேர்தலுக்கான பணிகளில், தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும், மார்ச் மாதம் நடக்க இருக்கின்றன. அதற்குள், தேர்தல் பணியில் ஈடுபடும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில், தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

           3,266 ஓட்டுச்சாவடிகள் : வேலூர் மாவட்டத்தில், 107 துறைகளின் கீழ் வேலை செய்யும் அனைத்து அதிகாரிகளும், தங்களின் விவரத்தை, தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமென, ஆட்சியர் நந்தகோபால் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, அரசு அதிகாரிகள், தங்களது விவரத்தை, தேர்தல் பிரிவு அலுவலகத்தில் தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தில், கடந்த, சட்டசபை தேர்தலில், 3,099 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது, கூடுதலாக, 173 புதிய ஓட்டுச்சாவடிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம், 3,266 ஓட்டுச் சாவடிகளாக்கப்பட்டுள்ளன. ஒரு ஓட்டுச் சாவடிக்கு, நான்கு அலுவலர்கள் வீதம், 13,500 பேர், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.அதற்காக, தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களை தேர்வு செய்து, அவர்களின் விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
          அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட, வசதிகளை, வரும், 31ம் தேதிக்குள், செய்து முடித்து, அறிக்கை அனுப்ப வேண்டுமென, அதிகாரிகளுக்கு, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
                 மாவட்டத்தில், இம்மாதத்துக்குள், தேர்தல் பணி அனைத்தும் முடிந்து, தேர்தலுக்கு, வேலூர் மாவட்டம் தயாராகி விடுமென, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive