Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு

   தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.முதல் முறையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும் தகுதித் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி வெளியானது.
தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 11-ஆம் தேதி கடைசித் தேதியாகும்.
மொத்தம் 7,243 பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. 7,243 பணியிடங்களில் 6,792 பணியிடங்களுக்கு பெண் செவிலியர்கள் மட்டும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தத் தகுதித் தேர்வுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கான தகுதித் தேர்வு ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய ஐந்து இடங்களில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.இதுகுறித்த கூடுதல் விவரங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive