Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

         மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். 

           இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை + அரசு பங்களிப்பு) மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது. இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.

தகவல் : ஏங்கெல்ஸ், திண்டுக்கல்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive