உள்ளாட்சி தேர்தல் ரத்தாகி உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல்
செய்த, 4.97 லட்சம் பேரிடம் இருந்து, கட்டணமாக பெறப்பட்ட, 10 கோடி ரூபாய்,
திரும்ப கிடைக்குமா என்று, வேட்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
4.97 லட்சம் பேர் : இதற்கான மனு தாக்கல், செப்., 26ல்,
துவங்கி, அக்., 3ல் நிறைவடைந்தது. உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட
மொத்தம், நான்கு லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களிடம், பதவி யின் தன்மைக்கேற்ப, கட்டணமாக, 100 ரூபாய் முதல் 2,000
ரூபாய் வரை, மொத்தம், 10 கோடி ரூபாய்க்கு மேல், வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, கலெக்டர்களின்
கட்டுப்பாட்டில், அரசு கருவூலங்களில், வைக்கப்பட்டு உள்ளது.
18ல் விசாரணை : உள்ளாட்சி தேர்தலை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், கட்டணம் திரும்ப கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர்
கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, உயர்
நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு
உள்ளது. இந்த வழக்கு, 18ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தேர்தல் கமிஷனுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத் தால், கட்டணத்தை திரும்ப
கொடுக்க வேண்டி இருக்காது. அது, நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே அமையும்;
தற்போதைக்கு, கட்டணத்தை திருப்பி தரும் திட்டம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...