Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிச்சத்துக்கு வந்த கருப்புப் பணம் ரூ.71,000 கோடி'

தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.71,000 கோடிக்கும் அதிகமான பணம் வெளிவந்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிலையம் (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது.

நாட்டில் கருப்புப் பணத்தை வைத்திருப்போர் அவற்றைத் தாமாக முன்வந்து அறிவித்து, உரிய வரியையும், அபராதத்தையும் செலுத்தினால் கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, 4 மாத கால அவகாசமும் அளித்தது.
இந்த அவகாசம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இத்திட்டத்தின்கீழ் அந்த 4 மாதத்தில் மட்டும் ரூ.65,250 கோடி கருப்புப் பணம் வெளிவந்தது. வரி, அபராதம் மூலம் அரசுக்கு ரூ.29,362 கோடி வருவாய் கிடைத்தது. கருப்புப் பண வெளியீடு தொடர்பான கணக்குகளை முழுமையாக முடித்த பிறகு இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஐசிஏஐ தலைவர் தேவராஜ் ரெட்டி இது தொடர்பாகக் கூறுகையில், "கருப்புப் பண வெளியீடு தொடர்பாக இப்போது கிடைத்துள்ள தகவலின்படி ரூ.71,000 கோடிக்கு மேல் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ரூ.65,250 கோடி கருப்புப் பணம் வெளிவந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இறுதிக் கணக்கீடு முடிந்த பிறகு இந்தத் தொகை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது என்றார் அவர்.
இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், தொழில்நுட்பத் துறை முதலீட்டாளருமான டி.வி. மோகன்தாஸ் பை கூறுகையில், "ரூ.65,250 கோடி மீட்கப்பட்டுள்ளது கருப்புப் பண மீட்பின் ஒரு சிறிய பகுதிதான். ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாதவகையாக மத்திய அரசு அறிவித்தால், மேலும் பல ஆயிரம் கோடி கருப்புப் பணம் வெளியாகும்'
என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive