முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு
அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை.
அரசு ஊழியர்கள், தங்களுக்குள்
நிதி திரட்டி, ஆண்டுதோறும் ஆயுத பூஜையை கொண்டாடுவது வழக்கம். தற்போது,
மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆயுத பூஜை ஏற்பாடுகள்
செய்யப்படவில்லை.
இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: வரும், 10ல், ஆயுத பூஜை வருகிறது;
அன்று அரசு விடுமுறை. இதனால், அரசு அலுவலகங்களில், 7ம் தேதி, ஆயுத பூஜை
நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால்,
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆயுத பூஜை கொண்டாடு வதை
தவிர்த்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...