Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூட்டமே கூட்டாத ஓய்வூதிய வல்லுனர் குழு

ஓய்வூதிய வல்லுனர் குழு 2018 ல் 2 முறை நீட்டிக்கப்பட்டும் ஒருமுறை கூட கூடவில்லை என, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய 2016 பிப்., 26 ல் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இதுவரை 7 முறை நீட்டிக்கப்பட்டும், அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மார்ச் 31 ல் இக்குழுவின் இயங்கு காலம் முடிகிறது.ஓய்வூதிய மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு நிதித்துறை பதில் அளித்துள்ளது.

அதில் 2016 ல் மார்ச் 28, செப்., 15, 16, மற்றும் 22, அக்., 6, டிச., 2 ல் குழு கூடியது. 2017 ல் மார்ச் 9, செப்., 6, அக்., 20, டிச., 20 ல் குழு கூடியதாக தெரிவித்துள்ளது. கூட்டப் பொருள் குறித்து தகவல் தர மறுத்துவிட்டனர். மேலும் 2018 ல் மட்டும் இக்குழு ஜன., 4, பிப்., 15 என, 2 முறை நீட்டிக்கப்பட்டன. இக்குழு ஒருமுறை கூட கூட்டம் நடத்தவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: எங்களை ஏமாற்றவே வல்லுனர் குழுவை தொடர்ந்து நீட்டித்து வருகின்றனர். அதன் இயங்குகாலம் 22 தினங்களே உள்ளநிலையில் இந்த ஆண்டு ஒருமுறை கூட கூடவில்லை. மேலும் கூட்டம் பொருளும் தர மறுக்கின்றனர். இதனால் எதர்காக கூடினார்கள் என்றே தெரியவில்லை, என்றார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive