NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி மாணவர்களின் ரூ.10 கோடி அரசுக்கு திரும்புது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர், வங்கிக்கணக்கு துவங்காததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய செலவினத்தொகை, 10 கோடி ரூபாய், அரசுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள, 1,324 ஆதிதிராவிடர் நல விடுதிகளில், 98 ஆயிரத்து, 539 பேர்; 42 பழங்குடியினர் நல விடுதிகளில், 2,782 பேர்; 314 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளி களில், 27 ஆயிரத்து, 652 மாணவ - மாணவியர் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு, தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப் படுகிறது. அத் துடன், பாடப்புத்தகங்கள், சீருடை போன்றவை யும் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் முடி வெட்டவும், மாணவியர் எண்ணெய், சீயக்காய் போன்றவற்றை வாங்கவும், மாதந்தோறும், பள்ளி விடுதியில் உள்ளோருக்கு, 50 ரூபாய்; கல்லுாரி விடுதியில் உள்ளோருக்கு, 75 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்படி, மாணவர்களுக்கு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வரை வழங்கப்படும். 

இந்த நிதியை வழங்காமல், விடுதி காப்பாளர்கள், முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த, அரசு உத்தரவிட்டது.கல்வி உதவித்தொகை பெறும், கல்லுாரி, மேல்நிலை பள்ளி மாணவ - மாணவியர், வங்கி கணக்கு துவக்கி உள்ளனர். 

ஆனால், 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியரில் பெரும்பாலானோர், வங்கி கணக்கு துவக்கவில்லை. இதனால், அவர்களுக்கு வழங்க வேண்டிய, பல்வகை செலவினத்தொகை, ஓராண்டாக வழங்கப்படவில்லை.

இந்த நிதியாண்டு கணக்கு, நாளையுடன் நிறைவு பெற உள்ளது. அதற்குள் பணத்தை வழங்கா விட் டால், 10 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு திரும்பி விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, பெற்றோர்சிலர் கூறியதாவது:வங்கி கணக்கு துவக்க, 'டிபாசிட்' செலுத்த வேண்டும். 

சில வங்கிகளில், 18 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு, தனி வங்கி கணக்கு துவக்க இயலாது. பெற்றோ ருடன் இணைந்து, வங்கி கணக்கு துவக்கினால், விடுதி காப்பாளர்கள் ஏற்பதில்லை. தபால் நிலையத்தில் கணக்கு துவக்கலாம் என்றால், அங்கு பணத்தை மாற்ற, ஆன்லைன் வசதி இல்லை. இதுபோன்ற காரணங்களால், பெரும்பாலான மாணவர்கள் வங்கி கணக்கு துவக்கவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கி, மற்றவர்களுக்கு வழங்காவிட்டால், பிரச்னை ஏற்படும் என்பதால், சில மாவட்டங்களில், இந்தத் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2017 ஜூன் முதல், இந்த தொகை வழங்கப்படவில்லை.மாணவ - மாணவியர் நலன் கருதி, இந்த ஆண்டுக்குரிய தொகையை, மாணவர்களிடம் வழங்க வேண்டும். அடுத்த ஆண்டில், வங்கி கணக்கில் செலுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive