NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாடிகளில் கம்பிவேலி - கல்வித்துறை உத்தரவு

சிவகங்கை: சிவகங்கையில்,
மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாடிகளில் கம்பிவேலி அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து இரண்டு மாணவியர் மாடியில் இருந்து குதித்தனர்.ஒரு மாணவி இறந்தார்; மற்றொரு மாணவி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவங்களால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து 'மாடிகளில் இருந்து கீழே குதிக்க முடியாதபடி உடனடியாக கம்பிவேலி அமைக்க வேண்டும்; மொட்டை மாடிக்குச் செல்ல முடியாதபடி கதவை பூட்ட வேண்டும்' என, உத்தரவிட்டனர். மேலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு மாணவர்களை வழிநடத்துவது குறித்து கவுன்சிலிங் நடத்தவும் முடிவு செய்தனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தவறு செய்தாலும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக எச்சரிக்க கூடாது என, ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அனுப்பவும் உத்தரவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive