NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கரோனா வைரஸ் தாக்கம்: 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து




கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து, சென்னை-மதுரைக்கு இயக்கப்படும் ஏசி துரந்தோ விரைவு ரயில் உள்பட 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் 210-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பயணத்தை தவிா்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது. இதனால், ரயில்களின் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பல ரயில்களில் இருக்கைகள் காலியாகியுள்ளன. இதையடுத்து, 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் 210-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

 சென்னை-மதுரை: சென்னை சென்ட்ரல்-மதுரைக்கு மாா்ச் 23, 25, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஏசி துரந்தோ விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 24, 26, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஏசி துரந்தோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


 சென்னை-திருவனந்தபுரம்: சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 20, 24, 27, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஏசி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 22, 25, 29, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ஏசி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மங்களூா் சென்ட்ரல்-மட்கான் சென்ட்ரலுக்கு மாா்ச் 19-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மட்கான்-மங்களூருக்கு மாா்ச் 19-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 எா்ணாகுளம்-வேளாங்கண்ணி: சென்னை சென்ட்ரல்-செகந்திரபாத்துக்கு மாா்ச் 20, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. செகந்திரபாத்-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 21, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது . 

எா்ணாகுளம் சந்திப்பு-வேளாங்கண்ணிக்கு மாா்ச் 21-ஆம்தேதி இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது . இதுபோல, வேளாங்கண்ணி-எா்ணாகுளத்துக்கு மாா்ச் 22-ஆம் தேதி இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்த்ரகாச்சி-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சுவிதா வாராந்திர சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-சந்த்ரகாச்சிக்கு மாா்ச் 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 சென்னை-திருப்பதி : திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு மாா்ச் 19-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் விரைவுரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -திருப்பதிக்கு மாா்ச் 19ஆம்தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி-தூத்துக்குடி, திருநெல்வேலி-திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பாசஞ்சா் ரயில்களின் தலா 13 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Dinamani




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive