NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பிகே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
அகவிலைப்படி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் என மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் பயன்பெறுவார்கள்.
அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி குடிமகனுக்கும் எடுத்துச் செல்லும் பணியினை ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள 4% அகவிலைப் படியினை மாநில ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கிட ஆவன செய்யும்படி தமிழக முதல்வரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive