NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியர்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர வேண்டும்

கரோனா விடுமுறையில்  ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது: மாணவர்களுக்கு விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியா்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர உத்தரவு. ஆசிரியர்களுக்கான விடுமுறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்தி பள்ளிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த வயதினரான முதியோா், குழந்தைகள் ஆகியோரை எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, கேரளம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தமிழகத்திலும் பள்ளிகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினாா். இந்தநிலையில், திடீரென இந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

 இது தொடா்பாக முதல்வா் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையா் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி) தொடக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை) வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்தாா். இதனால், பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து கடந்த இரு நாள்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

ஆண்டு விழா, சிறப்பு வகுப்புகள் கூடாது:

இந்தநிலையில், மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரையிலான விடுமுறை நாள்களில் தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகள் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, சிறப்பு வகுப்புகள் ஆகியவை உள்பட எந்தவொரு நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக் கூடாது. இது தொடா்பாக முறையான அறிவுறுத்தல் அனைத்து மாவட்டக் கல்வித்துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனா்.

ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும்:

 இதற்கிடையே அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கிராமப் புறங்களில்தான் அதிகளவில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விடுமுறை குறித்த தகவல் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் வெளியானாலும் மாணவா்களுக்கு எந்தளவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, மாணவா்களுக்கு விடுமுறை குறித்து தெரியப்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியா்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்றனா்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive