NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரோனாவை தடுப்போம் எழுத்தாளரின் வேண்டுகோள்..



அனைவருக்கும் பணிவான வணக்கம்... 

கொரோனா
இந்த ஒற்றை வார்த்தையில்தான் உலகம் ஆடிப்போயிருக்கின்றது

வளர்ந்த நாடுகளே தடுமாறிப்போயிருக்கின்ற சூழலில் நம் இந்திய தேசம் குறிப்பாக நம் தமிழ்நாடு இன்றைய சூழலை கட்டுக்குள் வைத்திருக்கின்றது எனச் சொன்னால் அதற்கு மிகமுக்கியமான காரணம் தமிழக அரசும், சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர். விஜயபாஸ்கர் அவர்களின் மிகச்சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே காரணம் ஆகும்.  

எத்தனையோ வேறுபாடுகள், அரசியல் நிலைப்பாடுகள்  ,  தனிப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றினைந்து நிற்க வேண்டிய தருணம் இதுவாகும்.  
இதுவரை கடந்துவந்தது முக்கியமல்ல. இனிமேல் கடந்துசெல்ல வேண்டியதே முக்கியம்.  அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதே அது.  

வீண் வதந்திகள் பரப்புவதை தடுப்பது, வெளிப்பயணங்களை தவிர்ப்பது, நிகழ்ச்சிகளைத் தள்ளிப்போடுதல் தன் சுத்தம் பேணுதல் மிக முக்கியமாக கூட்டமாக ஒன்றுகூடுதலைத் தவிர்த்தல் என்பதை மட்டுமே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 
அரசு என்பதே நாம் அனைவரும் இணைந்திருக்கும் அமைப்பே ஆகும். 

 தற்போதைய சூழலில் மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் ஒப்பற்ற சேவையினை தன்னலம் பாராமல் ஓய்வின்றி செய்து வருகின்றனர். அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அவரவரவர் வாழுகின்ற பகுதிகளில் கொரோனா அபாயம் வராமல் தடுப்போம்.  

அரசு ஊழியர்களும், ஊடகவியலாளர்களும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பணியினையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளையும் மேற்கொள்வதில் முக்கியப்பங்காற்ற வேண்டியது அவசியமாகின்றது..

 இணைந்து நிற்போம்... கொரோனாவிடம் இருந்து மக்களைக் காப்போம்..

சிகரம்.சதிஷ்குமார்
எழுத்தாளர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive