NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.11.21

  

திருக்குறள் :

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். 

பொருள் 

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்

பழமொழி :

A drowning man will catch at a straw


நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 

2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்

பொன்மொழி :

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
அப்துல்கலாம்

பொது அறிவு :

1. சூரிய மண்டலத்தின் மிக அடர்ந்த கோள் எது? 

பூமி 

2. பூமி தன் அச்சில் முழுமையாக சுற்ற எடுக்கும் நேரம் எவ்வளவு? 

23 மணி நேரம் 56 நிமிடங்கள் 4 வினாடிகள்

English words & meanings :

Fill me in - give me more details, இன்னும் அதிக விவரம் தேவை, 

I am all ears - listening to you, நீ சொல்வதை கவனித்து கேட்கிறேன்

ஆரோக்ய வாழ்வு :



விட்டமின் K. இது காயங்கள் ஆற்றி இரத்தம் உறைய வைக்கும். இது கீரை, காலி பிளவர், காரட், தக்காளி, பச்சை தேயிலையில் இருந்து நமக்கு கிடைக்கும்.

கணினி யுகம் :

Windows Logo+R (Open the Run dialog box)

Windows Logo+U (Open Utility Manager)

நீதிக்கதை

உதவியின் சிறப்பு

குறள் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது. 

விளக்கம் :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. 

கதை :
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 

அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 

ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. 

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 

இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 

நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

22.11.21

◆தமிழக அரசுடன் இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)நடத்தும், தகவல் தொடர்புத் துறை குறித்த ‘கனெக்ட் 2021’ சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை வரும் நவம்பர் 26-ம் தேதி தொடங்க உள்ளது.

◆தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்துள்ளது. 

◆தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆கரோனா அறிகுறி உள்ளவர்களை குணப்படுத்த உதவும் ஆயுஷ்-64 மாத்திரை தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை 46 நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய ஆயுஷ்அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

◆உலகின் முதல் மின்சார தானியங்கி கார்கோ கப்பல்: நார்வேயின் யாரா இன்டர்நேஷனல் அறிமுகம்.

◆உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷியாவின் டேனில் மெட்விடேவ் தகுதி பெற்றுள்ளார்.

◆ப்ரீமியர் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி வெற்றி.


Today's Headlines

 * Co joined with Tamil Nadu the Confederation of Indian Industry (CII) conduct an international conference.
 "Connect 2021" in regards to the communication Department on November 26.

* On National Level Clean City Forum Chennai listed 43.

* On the coming days there is a chance of more rains says Chennai Metrological Department.

* To cure the Corona symptom patients Central Ayush Ministry approved to give the technology of Ayush 64 medicines to 46 organizations.

* First electric autonomous cargo ship launched in Norway by Yara International Company

* For the World Championship in Tennis Finals Danil Medvedev of Russia is qualified.

* In Football Premier League Liverpool team won the game
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive