NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.11.2022





திருக்குறள் :

பால் : அறத்துப்பால், 

அதிகாரம் - மக்கட் பேறு: 

குறள்:62 - 
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

விளக்கம்:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா

பழமொழி :

Aspiring people are inspiring people.

ஆர்வம் உடையோரே ஆர்வத்தை தூண்ட முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல

பொன்மொழி :

வேலை செய்வதற்கு ஏற்ற மிகவும் அமைதியான நேரம் இரவு. இது சிந்தனைக்குத் துணைபுரிகிறது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

பொது அறிவு :

1. ஐந்து நதிகள் ஓடும் இந்திய மாநிலம் எது ? 

 பஞ்சாப்

 2. ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் எது? 

 டோக்கியோ.

English words & meanings :

bail -to clear water. நீரை வெளியேற்றுவது. verb. bail -temporary release of the prisoner. பிணை. transitive verb. வினைச் சொல். both homonyms 

ஆரோக்ய வாழ்வு :

பச்சையான பாதாம் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது., குறிப்பாக இந்தியா போன்ற ஈரப்பதமான, வெப்பமண்டல காலநிலையில், பாதாம் பருப்பை ஒரே இரவில் தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்து காலை உணவுடன் 6-7 பாதாம் சாப்பிடுவது சிறந்தது.

NMMS Q

உலோக பண்புகளையும் அலோக பண்புகளையும் பெற்ற தனிமங்கள் ---- என்று அழைக்கப்படுகின்றன. 

விடை - உலோகப் போலிகள் 

நவம்பர் 23


கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்




சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்



சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

வியாபாரியின் கதை

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 

ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 

மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 

அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 

அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 

குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 

நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 

குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 

நீதி :
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.

இன்றைய செய்திகள்

23.11.22

* மதுரை மாவட்டத்தில், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

* அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, இந்த மாதம் முதல் வாரம் 3 முட்டை, சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிப்பட்டுள்ளது.

* அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப். ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

* நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி 252 ஆக அதிகரிப்பு; நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்.

* இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி உள்ளது.

* 2024 டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* கராத்தே 1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பிரனாய் சர்மா.

Today's Headlines

 * The Tamil Nadu government has declared an area of ​​193.215 hectares in Aritapatti and Meenakshipuram villages in Madurai district as Aritapatti Biodiversity Heritage Site.  It is the first Biodiversity Heritage Site in the state.

 * Electricity consumers are in trouble as they can pay electricity bill online only by linking Aadhaar number with electricity connection number.

 * Health Minister Mr.M. Subramanian has said that new guidelines will be issued for surgeries performed in government hospitals.

 * An order has been issued to provide 3 eggs, energy flour and enriched biscuits to children in Anganwadi centers in the Integrated Child Development Scheme from the first week of this month.

* Northern Zone Army Commander Lieut said that the army is ready to complete the task of returning occupied Kashmir if the government orders it.  General Upendra Dwivedi said.

 * It is estimated that the central government's food subsidy in the current financial year will be exceeded by Rs.3 lakh crore.

 * Indonesia earthquake: Death toll rises to 252;  Thousands sheltered in relief camps.

 * Australia has won the ODI series against England by 3-0.

* It has been decided to host the 2024 T20 World Cup in the USA and West Indies.

* Pranai Sharma became the first Indian to win a gold medal in Karate 1 Series A category.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம் 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive