NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2023

      திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண் : 165
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

பொருள்:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்

பழமொழி :

Better be sure than sorry
வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.திருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றியை காணவேண்டும்.

பொது அறிவு :

1. கறுப்புச்சட்டம் என்று அழைக்கப்பட்டது எது?

 ரௌலட் சட்டம் . 

 2. இந்தியாவின் நைல் நதி எனப்படுவது எது? 

 கங்கை.

English words & meanings :

 leaners - people who are not fat and thin. My father is a leaner. மெலிந்து ஆரோக்கிய உடல் கொண்டவர். பெயரடை

ஆரோக்ய வாழ்வு :

அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது. ஆனாலும் கொழுப்புச்சத்து அதிகமில்லாத லீன் மீட் வகைகளை தேர்வு செய்வது நல்லது.

கடல் உணவுகள், ஆட்டிறைச்சி, சிக்கன் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 அதிகம். உடலில் ஏற்படும் வைடட்டமின் பி12 பற்றாக்குறை ஆபத்தைக் குறைப்பதோடு இதில் போதிய அளவு புரதச்சத்து, ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருக்கின்றன. இது கார்டியோ வாஸ்குலர் நோய்கள் உள்ளிட்டவற்றை தடுக்க உதவும்

கணினி யுகம்

Ctrl + Del - Cut selected item. Ctrl + Ins - Copy the selected item


மார்ச் 30


வின்செண்ட் வான்கா  அவர்களின் பிறந்தநாள் 




வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு:; (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

நீதிக்கதை

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.

அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.

நீதி :

தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.03. 2023

* 2022-23-ஆம் ஆண்டில் 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கல்: தமிழக அரசு தகவல்.

* ரூ.44 கோடியில் சென்னை குடிநீர் பணிகள், 8 மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: நீர்வளத் துறையின் 12 அறிவிப்புகள்  வெளியீடு.

* கரூரில் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

* நாட்டில் கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்பிபி1 வைரஸ் பரவி வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரியவித்துள்ளது.

* இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

* பாகிஸ்தானில் கரன்சி மதிப்பு சரிந்ததால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்.

* இந்திய தடகள சம்மேளனம் சார்பில் நடைபெற்ற  'இந்திய கிராண்ட்பிரி2'  தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்  தமிழக வீராங்கனை அர்ச்சனா இரட்டை தங்கத்தை கைப்பற்றினார்.

* தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்: தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் 2-வது முறையாக சாம்பியன்.

Today's Headlines

* 6.61 lakh new driving licenses to be issued in 2022-23: Tamil Nadu Govt.

 * Chennai drinking water works at Rs 44 crore, new barrages in 8 districts: 12 notifications issued by water resources department.

*  High Court orders submission of inspection report on illegal sand mining in Cauvery river at Karur.

* The Union Ministry of Health has informed that a new strain of Corona virus XPB1 virus is spreading in the country.

 * Union Aviation Minister Jyotiraditya Scindia has said that flying taxis will be in public use in India within the next 5 years.

 * A devaluation of the currency has led to a shortage of life-saving medicines in Pakistan.

 * T20 vs South Africa: West Indies won the series by 7 runs.

 * Tamil Nadu player Archana won the double gold in the 'Indian Grand Prix 2' athletics championship organized by the Athletics Federation of India.

 * National Table Tennis Championship Series: Tamil Nadu's Sathyan Gnanasekaran got champion for the 2nd time.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive