அதன்படி நடப்பாண்டு அமைச்சுப்பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலமாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு பணி விடுவிப்பு செய்யும்போது பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிற மாநில ஆவணங்களாக இருந்தால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...