![]() |
| உலக எழுத்தறிவு தினம் |
இயல் : அரசியல்
அதிகாரம்:49.காலம் அறிதல்
குறள் எண்:489
குறள்:
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
பொருள்:
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.
No smoke with out fire
நெருப்பில்லாமல் புகையாது.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன்.
2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.
பொன்மொழி :
“இளமையில் கற்ற திறமை, வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.”
Thought for the Day :
“A skilled generation is the foundation of a strong nation.”
பொது அறிவு :
1. 50 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
ஹம்பி (கர்நாடகா)
2. 20 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
எல்லோரா குகை (மகாராஷ்டிரம்)
English words :
1. Audacious – Bold and brave, துணிச்சலானவர்.
2. Astounding – Very surprising, மிகவும் ஆச்சரியமான.
புவியியலும் சுற்றுசூழலும் :
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – தொட்டபெட்டா
உயரம்: சுமார் 2,637 மீட்டர்
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஊட்டி நகருக்கு அருகில் அமைந்துள்ளது.“தொட்டபெட்டா” என்ற பெயர் பொதுவாக “பெரிய மலை” என்ற பொருளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
NMMS :
MAT
ஹைட்ரோஃபோபியா என்பது :
(1) நீரைக் கண்டு பயப்படுவது
(2) ஒலியைக் கண்டு பயப்படுவது
(3) பசியின்மை
(4) தோல் தடிப்பு
விடை: (1) நீரைக் கண்டு பயப்படுவது
செப்டம்பர் 08
நீதிக்கதை
“ஆசிரியரின் அறிவுரை ”
ஒரு பள்ளியில் நிவேதா என்ற மாணவி படித்து வந்தாள். ஒருநாள் ஆசிரியர் வகுப்பில் அனைவருக்கும் ஒரு சிறிய பணியை வழங்கினார். நிவேதா அதைச் சரியாகச் செய்யவில்லை .
ஆசிரியர் அன்பாக, “நிவேதா, இன்னும் கொஞ்சம் கவனமாகச் செய்தால் நன்றாக இருக்கும்,” என்று அறிவுரை கூறினார்.
அதைக் கேட்ட நிவேதா கோபமடைந்து, ஆசிரியரிடம் எதிர்த்து பேசினாள். வகுப்பு முடிந்ததும் அவளுடை ய தோழி அவளிடம், “ஆசிரியர் உன்னைத் தாழ்த்துவதற்காக சொல்லவில்லை, உன் தவறைச் சுட்டிக்காட்டி முன்னேற உதவுவதற்காகத்தான் சொன்னார்,” என்றாள்.
நிவேதா தனது தவறை உணர்ந்தாள். மறுநாள் ஆசிரியரிடம் சென்று, “ஆசிரியரே , நேற்று நான் கோபத்தில் உங்களிடம் எதிர்த்துப் பேசியது தவறு. என்னை மன்னியுங்கள். இனிமேல் உங்கள் அறிவுரையை மதிப்பேன்,” என்றாள்.
ஆசிரியர் மகிழ்ச்சியுடன் நிவேதாவைப் பாராட்டினார்.
🌱 நீதி:
ஆசிரியர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும். அவர்களின் அறிவுரையைப் பொறுமையாக கேட்டு, தவறு இருந்தால் பணிவுடன் திருத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...