Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு


             ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு


            குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.



ஐ.ஐ.டி.,யின் தனித்தன்மை குறைகிறதா?


                  இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்வது ஐ.ஐ.டி., இன்று அதன் தனித்துவம் குறைகிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பீகார் "சூப்பர்  30" நிறுவன இயக்குனர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். இவர் பீகாரில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் 30 பேருக்கு, இலவசமாக ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு பயிற்சி அளித்து வருகிறார்.

நாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள் ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவக்கம்


              நாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.




ஆசிரியர் தகுதி தேர்வு மையத்திற்கு செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை


                  ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று  பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராமானுஷம் கூறினார்.


என்.ஓ.சி., பெற தேவையில்லையா? சி.பி.எஸ்.இ., அறிவிப்பால், கல்வித்துறை அதிர்ச்சி


               "சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், என்.ஓ.சி., வாங்கத் தேவையில்லை" என, சி.பி.எஸ்.இ., அறிவித்தித்திருப்பது, தமிழக கல்வித் துறையை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. "இந்த பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்" என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




ஆசிரியர் மீதான பாலியல் புகார்: அதிகாரி குழு விசாரிக்க கோரிக்கை


               "ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.




பி.எட்., படிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி


        பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை, இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை, இப்படிப்பிற்கு, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.


         

மண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்


               "பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது:




சத்தீஷ்கார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: முதல் மந்திரி அறிவிப்பு


              சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்–மந்திரி ராமன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


                     புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.


சிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்


             பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி” புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.



சுதந்திர தின விழா - தேச பக்தர்களின் நினைவை போற்றி பாதுகாக்கும் மகிழ்ச்சியான விழா? - சிறப்புக்கட்டுரை


             தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைபள்ளிகள் என அனைத்திலும் பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.

                உதாரணமாக உயர்நிலை பள்ளிகளில் கிராம கல்விக் குழு ( VEC ), பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA), பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ), பள்ளி கட்டிட வளர்ச்சிக் குழு ( SMDC ), அன்னையர் தின குழு என பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.

TET தேர்வுக்கு "சூப்பர் டிப்ஸ்"



              ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.


* ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர், பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனி, புதிய பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய வேண்டும்.

Re-Option Chance - No Benefit.



               G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு.

            (இதில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். சரிசெய்து வெளியிடுவோம்)
               தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION  பற்றி ஒரு சிறு விளக்கம்.
OPTION பற்றிய விளக்கம். 


டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள்



              "ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், டி.இ.டி., தேர்வு பணிகளை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்" என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.



வருகின்றன 300 பாலிடெக்னிக் கல்லூரிகள்



           "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.


உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு



                பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.



தொலைதூர கல்வி மாணவர்களுக்கு சென்னை பல்கலை அறிவுறுத்தல்


           "சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில், 2005-06ம் ஆண்டு முன் பட்டப்படிப்பில் சேர்ந்து, இதுவரை பட்டப்படிப்பை முடிக்காதவர்கள், புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதுமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆ?


          சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக அதிகரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். 

தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை


             7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு குடியரசு தின சதுரங்கப் போட்டிகள் நடத்துவதற்கான செயல்த்திட்டம் வகுத்து தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை வெளியீட்டுள்ளார்


BRC Training to 40 % SG & BT Teachers


             Communicate English என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ( 24.08.2013) அன்றும் 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (07.09.2013) அன்றும் பயிற்சி அளிக்க முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி SCERT உத்தரவு

AEEO Promotion - 2013-14

             2013-14 ஆம் கல்வியாண்டு - தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உதவி/ கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறூதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 251 முதல் 350 வரை 20.08.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது.

டி.இ.டி., தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் புறக்கணிப்பு


               ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பணிகளை புறக்கணிப்பதாக, முதுகலை ஆசிரியர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்குழு கூட்டம், நாளை நடத்த வேண்டும்


         அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை வளர்ச்சிக்குழு சிறப்பு கூட்டம் நாளை (15ம் தேதி) நடத்தப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழரசு உத்தரவிட்டுள்ளார்.




புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது


             புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது.


17.8.2013 All Schools Leave - Its compensatory to 30.08.2013


          17.08.2013 அன்று TET முதல் தாள் தேர்வை முன்னிட்டு CBSE உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தும் 31.08.2013 அன்று ஈடுசெய்யும் வேலை நாளாகவும் அறிவித்து அரசாணை 131 வெளியீடு


ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது



           ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

          முறையான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு


 TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...



             டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 17 லட்சத்து 552 பேர் விண்ணப்பித்த நிலையில், 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.





இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.


                   வரும், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல், கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




சுதந்திர தினத்தில் "டிமிக்கி': ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை "கிடுக்கிப்படி'


                சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, "டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, "கிடுக்கிப்பிடி' போடப்பட்டு உள்ளது. தனிவருகைப் பதிவேட்டில் பதிவு செய்யவும், வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.




குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை



                    "பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive