After a dinner sleep a while
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
வீழ்வது தோல்வியல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.
Thought for the Day :
Success is not final; failure is not fatal. It is the courage to continue that counts.
பொது அறிவு :
1. சிவகாசி நகரத்தை ""குட்டி ஜப்பான்"" என அழைத்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு.
2. தமிழ்நாட்டில் வற்றாத ஜீவ நதி என்றழைக்கப்படும் ஆறு எது?
தாமிரபரணி.
English words :
Construct – Build, கட்டமை
Examine – Inspect, ஆராய்
புவியியலும் சுற்றுசூழலும் :
பூமியில் 7 கண்டங்களும் 5 பெருங்கடல்களும் உள்ளன.உலகின் மிகக் குளிரான கண்டம் – அண்டார்டிகா.
NMMS :
MAT
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
(1) (7,13)
(2) (13,23)
(3) (31,37)
(4) (81,83)
விடை: (4) (81,83)
நீதிக்கதை
நீதி கதை: "திருமண விழாவில் கிடைத்த பாடம்"
ஒரு கிராமத்தில் இம்ரான் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள், அவன் தனது குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்றான்.
திருமண மண்டபத்தில் வயதான தாத்தா, பாட்டிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், இம்ரான் அவர்களைக் கவனிக்காமல், காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த அவனுடைய அக்கா ஹஸ்னா, "இம்ரான், பெரியவர்கள் நிற்கிறார்கள். நாம் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுப்பது மரியாதை," என்று கூறினாள்.
உடனே இம்ரான் எழுந்து தனது இருக்கையை ஒரு தாத்தாவுக்கு கொடுத்தான். தாத்தா புன்னகையுடன், "நல்ல பழக்கம்தான் மனிதனை உயர்த்தும். நீ நல்ல பிள்ளையாக வளர்வாய்," என்று ஆசீர்வதித்தார்.
அந்த ஆசீர்வாதத்தைக் கேட்ட இம்ரான் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அன்று முதல் எங்கு சென்றாலும் பெரியவர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்களுக்கு முதலில் இடம் கொடுக்கவும் பழகினான்.
நீதி:
"பெரியவர்களை மரியாதையுடன் நடத்தினால், அவர்களின் ஆசீர்வாதம் நம் வாழ்க்கையை வளமாக்கும்."
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...