Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை வரும் ஆண்டு துவங்கும்"


                மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ.,யின், கொள்கையால், பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்க, கால தாமதம் ஏற்படுகிறது, என, வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.


             மேலும் அவர் கூறியதாவது: கடந்த, 2012ல், முதல்வர் ஜெயலலிதா, பெருந்துறையில், அரசு பாலிடெக்னிக் மற்றும் சிவகிரியில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என அறிவித்தார். மேலும் இரண்டு கல்லூரியும், 2012ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும், என்றார்.

                கலை அறிவியில் கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவ மாணவிகள் சேர்க்கை நடந்து, கல்லூரி நடந்து வருகிறது. ஆனால், பெருந்துறை துவங்குவதாக அறிவித்த, அரசு பாலிடெக்னிக் மட்டும் துவங்கவில்லை.

                    புதியதாக துவங்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, புதுடெல்லி, அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அனுமதி வழங்க வேண்டும். அனுமதி பெற, சில வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். புதிதாக துவங்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகள் சொந்த கட்டிடத்தில் இயங்க வேண்டும். அப்போது தான் நிரந்தமாக லேத், லேப் போன்ற வசதிகளை நல்ல முறையில் செய்வார்கள் என்ற கருத்து உள்ளது.

          பெருந்துறையில் துவங்கப்பட உள்ள, அரசு பாலிடெக்னிக், சொந்த இடத்தில் விரைவில் துவங்கும். வரும் கல்வி ஆண்டில், சேர்க்கை நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive