NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நவம்பர் 5ல் விண்ணில் பாய்கிறது "மங்கள்யான்" செயற்கைகோள்


           செவ்வாய் கிரகத்திற்கு, "மங்கள்யான்" செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

          செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான காரணிகள் உள்ளனவா என்பது குறித்தும், கனிம வளம் குறித்தும் ஆய்வு செய்யும் நோக்கில், முதல் செயற்கைகோள், "மங்கள்யான்" இம்மாத இறுதியில் ஏவப்படும் என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் பசிபிக் பெருங்கடலில் நிலவிய, மோசமான வானிலை காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது.

               இந்நிலையில், விண்கலம் ஏவுவதற்கான வாரியத்தின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மங்கள்யான் செயற்கைகோளை அடுத்த மாதம், 5ம் தேதி ஏவமுடிவு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நவம்பர் 5ம் தேதி, செவ்வாய்கிழமை பி.எஸ்.எல்.வி., சி 25 ராக்கெட் மூலம் பிற்பகல், 3:28 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, நேற்று, இஸ்ரோ வெளியிட்டது. மங்கள்யான் செயற்கைகோளுக்காக, 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive