Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வன்முறையின் ஊற்றாக உள்ளது தொலைக்காட்சி: குழந்தைகள் மாநாட்டில் தகவல்


           பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது. யுனிசெப் தொடர்பாளர் சுகாட்டாராய், முதன்மை அலுவலர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

              இதில் ஐ.நா., சபை மூலம் தேர்வு செய்யப்பட்டு, இந்தியா சார்பில் ஜெனிவா சென்று பங்கேற்ற, கர்நாடகாவை சேர்ந்த மாணவி மஞ்சுளா முனவள்ளி பேசியதாவது: இந்தியாவில் உள்ள 9 மாநில குழந்தைகளின் சார்பில், நான் தேர்வு செய்யப்பட்டு, குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை குழு சார்பில் நான், கடந்த மாதம் ஜெனிவா சென்று வந்தேன்.

             இந்தியாவில் வெவ்வேறு கட்டங்களில் குழந்தைகள் வயது கணக்கிடப்படுகிறது. குறிப்பாக கல்வி உரிமை சட்டம் 1 முதல் 14 வயது என்கிறது. மன ரீதியாகவும், உடல், மூளை வளர்ச்சி ஆகியவை முழுமை பெறுவது 18 வயதில்தான், அதனால்தான் நாங்கள் 18 வயதை தீர்மானிக்கிறோம். தரமான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்.

              குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சினிமா, தொலைக்காட்சிகள் ஆபாசம், வன்முறையின் ஊற்றாக உள்ளது. இதை தவிர்த்து ஊடகங்கள் அறிவுவூட்டும், தன்னம்பிக்கை கதைகளை குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்தை கற்று கொடுப்பதை விட, குழந்தைகளுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து, அந்த திறமையை ஊக்குவிக்க வேண்டும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive