Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு கண்காணிப்பு கேமரா

         பிளஸ் 2 வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அனைத்து தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் கூறினார்.
 
           பொன்னேரி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தேர்வு மையத்தை வெள்ளிக்கிழமை அவர் பார்வையிட்டார். அப்போது தேர்வு மையங்களில் மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளதா என தலைமையாசிரிர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலகத்தில் பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையத்தை அவர் பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக, பழவேற்காடு, மெதூர் உள்ளிட்ட பள்ளிகளிலும் அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 வினாத்தாள் இருக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு முடிந்ததும் வினாத்தாள் அனைத்தும் வினாத்தாள் திருத்தும் மையங்களுக்குப் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive