Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

         தமிழகம் முழுவதிலும் 13 முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரம்

      (அடைப்புக்குறிக்குள் அவர்கள் இதுவரை பணியாற்றிய இடம்) ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) - பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலர், ஜெயக்குமார் (விருதுநகர்) - கன்னியாகுமரி, புகழேந்தி (திருவண்ணாமலை எஸ்.எஸ்.ஏ.) - விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர், பொன்குமார் (கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ.) - திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர், திருவளர்செல்வி (கரூர்) - தஞ்சாவூர், தமிழரசு (தஞ்சாவூர்) - கிருஷ்ணகிரி, ராமசாமி (கிருஷ்ணகிரி) - கரூர், முனுசாமி (தூத்துக்குடி) - பெரம்பலூர், ராமகிருஷ்ணன் (நாகப்பட்டிணம்) - தூத்துக்குடி, ஞானகெüரி (கோவை) - சேலம், சாந்தி (காஞ்சிபுரம்) - புதுக்கோட்டை, உஷா (சேலம்) - காஞ்சிபுரம், அருள்முருகன் (புதுக்கோட்டை) - கோவை.




5 Comments:

  1. அச்சச்சோ....இதுல சிலபேர மாத்த இதுமட்டும் தான் காரணமோ...அம்மா சும்மா மாத்த மாட்டாங்கங்கோ...

    ReplyDelete
  2. pudukkottai C.E.O mr N.Arulmurugan role model C.E.O. ivarai mattriyathu entha vithathilum naayam illai. intha visayathil pudukkottai district public annaivarukkum romba, romba athirpthi. year muluvathum teachers annaivarum refresh akka velai parkkavendum endra ennathil year muluvathum ethavathu nigalchiudan teacherskalai velai vangum oru makan. mrs sabitha amma avarkal udanadiya pudukkottai C.E.O mr N.Arulmurugan avarkalin transferai rathu seithu. mr N.Arulmurugan joint Director aaka promotion pora varaikkum pudukkottaiyelai pani seiya vidunka.

    ReplyDelete
  3. குருநானக் தம்முடைய சீடர்களோடு ஒருமுறை பாத யாத்திரை சென்றாராம் அப்போது ஒரு ஊரில் சென்று தங்கினாராம் அந்த ஊரில் உள்ள மக்கள் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லையாம் அந்த ஊரில் இருந்து கிளம்பும் போது குருநானக் அந்த ஊரில் உள்ள மக்களை எல்லாம் அதே ஊரில் இருக்கும் படி ஆசிர்வாதம் வழங்கி சென்றாராம்... கொஞ்ச தூரம் நடந்து சென்று மற்றொரு ஊரில் தங்கினாராம் அந்த ஊர் மக்களெல்லாம் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்தார்களாம், குருநானக் அந்த ஊரை விட்டு கிளம்பும் போது அந்த ஊரில் உள்ள மக்களெல்லாம் வெவ்வேறு ஊருக்கு போகும்படி ஆசிர்வாதம் வழங்கினாராம்... அதை கண்ட அவரின் சீடர்கள் ஏன் குருவே இதுபோல செய்தீர்கள் என்று கேட்டதற்கு குருநானக் சீடர்களிடம் முதல் ஊரிலே இருந்தவர்கள் கொஞ்சம் கூட மனித தன்மை அற்றவர்கள் அவர்கள் பிற ஊர்களுக்கு சென்றால் அங்கு உள்ளவர்களையும் அதேபோல் கெடுத்துவிடுவர்கள்.. இரண்டாவ து ஊரில் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள் அவர்கள் பிற ஊர்களுக்கு சென்றால் மற்றவர்களையும் நல்லவர்களாக மற்றிவிடுவர்கள் அதனால் தான் அப்படி செய்தேன் என்றாராம்.. அப்போதுதான் சீடர்களுக்கு புரிந்ததாம்...( இவர்களில் இதுபோன்று சாதி மத இனம் பார்க்காத லஞ்சம் வாங்காத நேர்மையான சில நல்ல மனிதர்களும் இருக்கதான் செய்கிறார்கள் நண்பரே....)

    ReplyDelete
  4. former pudukkottai C.E.O mr N.Arulmurugan avarkalukku porunthum super story, VALKA VALAMUDAN.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே நல்லவர்களின் வழ்த்துக்கள்...நீண்ட காலம் வாழவைக்கும்...

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive