Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி

     தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையோடு (ஜூன் 4) முடிவடைகிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.

        இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி:
2015-16- ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.



இதில் சேர விரும்பும் மாணவர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்படும். முதல் நாளில் சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.


ஜூலை 2-ஆம் தேதி ஆங்கில வழியில் படிக்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், பிற சிறுபான்மை மொழியில் படிக்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். 3-ஆம் தேதி தொழில் பிரிவினருக்கும், 4, 6-ஆம் தேதிகளில் கலைப் பிரிவு மாணவர்களுக்கும், 7 முதல் 10-ஆம் தேதி வரை அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive