Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மரணம் தவிர மாற்றுவழி இல்லையா - வெய்ட்டேஜால் ஏமாந்த ஆசிரியர்களின் குமுறல்


2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏன் தான் தேர்ச்சி பெற்றேனோ???

கடந்த ஆண்டு 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அடுத்த மாதம் பணிநியமண ஆணை கிடைக்கும் என்ற கனவில் இருந்தேன்.. அக்கனவை இனி எப்போதுமே நனவாகமல் தடுத்து விட்டனர்.....


உயர் இடத்தில் இருப்பவர்களுக்கு ஏழ்மைகளின் நிலை எப்படி தெரியும் :

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏழைகளின் கல்வி நிலை எவ்வாறு தெரியும்... கிராமத்தில் அரசுப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் நடையாய் நடந்து உண்ண உணவின்றி கஷ;டப்பட்டு படித்து எடுத்த 800 மதிப்பெண்ணின் அருமை அவர்களுக்கு எவ்வாறு தெரியும்.. இந்த வெய்ட்டேஜ் முறை ஏதோ ஒரு உயர் வகுப்பினரின் கல்வி திறனை மையமாக வைத்து எங்களை போன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்பட்டோரை புறக்கணிக்கும் விதமாகவே உள்ளது .


குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது இயலாது:

கஷடப்பட்டு படித்து தேர்ச்சிப்பெற்ற 2013ம ஆ;ணடு தேர்வுக்கே தெளிவான விடை இல்லை.. 2015 டெட்டு மட்டும் விதிவிலக்கா.... 2013ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் இப்போது தேர்வுக்கு புத்தகத்தை எடுத்து படித்தாலே கண்ணீர் வருகிறது.. இந் ஆட்சியின் ஆசிரியர்களால் மரணத்திலும் மறக்க முடியாத கொடுமை என்றால் அது வெய்ட்டேஜ் என்பது... உச்சநீதிமன்ற வழக்கு ஒருபுறம் இருக்க வெய்ட்டேஜ் கொடுமை ஒருபுறம் இருக்க குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எப்படி என தேர்வுக்கு படிக்க முடியாமல் திணறி வருகின்றனர்

மரணம் தவிர மாற்று வழி இல்லையா?

வெய்ட்டேஜ் கொடுமையை எதிர்த்து சாலைமறியல், உயர்நீதிமன்ற வழக்கு, ஆட்சியின் உயர்மட்ட வரை மனுக்கள், பேச்சுவார்த்தைகள், அறப்போராட்டம் என அனைத்தையும் அறங்கேறி பின்பு இவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.. நீதியின் ஒரு துளி எங்காவது இருக்குமா என்று கண்ணீர் துளிகளோடு காத்திருக்கும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்... மரணம் தான் முடிவென்றால் இந்த அரசு என்னை போன்ற ஆசிரியர்களுக்கு கருணைக்கொலையை அங்கீகரிக்க வேண்டும்

இப்படிக்கு

பி.இராஜலிங்கம் புளியங்குடி, மாநிலப்பொருளாளர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் 





11 Comments:

  1. pg 2014-2015 supplementary (economics) selection list kku villupuram verification appothu posting poduvanga sir

    ReplyDelete
  2. மாலை வணக்கம்

    ReplyDelete
  3. Sir karunai kolaikku enga apply pannanumnu sollunga sir.thinam thinam saguratha vita ithu evlo best sir

    ReplyDelete
    Replies
    1. ..சென்ற வருடமே பணிக்கு சென்றிருக்க வேண்டும்.பரவாயில்லை இனி வருகின்ற காலிப்பணியிடங்களை
      நம்மை கொண்டு நிரப்பிவிட்டு அடுத்த தகுதித்தேர்வை அறிவித்தால்...

      Delete
    2. Sir, don't worry , we r in same, but this is not our life, we want search alternative one ,,,, don't worry no god with us but we have confident... Sir ....

      Delete
    3. மிஸ்டா் ஆரோக்கிய ராஜ் தகுதிதோ்வு ஆசிாியா் நியமனம் மூலம் பணம் சம்பாதித்த கண்டகண்ட அரசியல் நாய்களே உயிரோடு இருக்கும் போது நமக்கு சாக வேண்டும் என்று என்ன தலை எழுத்தா. நமக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த அரசியல் நாய்கள் அழிவதை பாா்ப்பதற்காக நாம் வாழ வேண்டும்...
      இப்படிக்கு
      90 & Above

      Delete
  4. 2015 tet yeluthunga udane permission kidaikkum

    ReplyDelete
  5. 2013 -ம் ஆண்டு தகுதித் தேர்வீல் தேர்ச்சி பெற்ற ஆசிரிய சகோதர/சகோதரிகளே..

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும்., தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களை கொண்டே இந்த கல்வியாண்டின் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து களத்தில் இறங்கி போராட வேண்டும்.கோரிக்கை நிறைவேறும் வரை.இனி வரும் காலகட்டங்களில் நமது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

    ஆசிரிய பெருமக்களே ஒன்றினையுங்கள்., அதுவும் அடுத்த தகுதித்தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்...

    ReplyDelete
    Replies
    1. பதவி ஆசை பிடித்து அலையுற ஒரு நாய் இருக்குற வரைக்கும் போராட்டமெல்லாம் வேஸ்ட்.

      Delete
  6. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை நீதிமன்றம் மூலம் கேட்போம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive