NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 18, 19ம் தேதி வேலைநிறுத்தம்

போனஸ் உச்சவரம்பு தொகையை ரூ.3,500ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி இலாகா ஊழியர்களுக்கு கொடுத்தது போல நிலுவைத்  தொகையை (அரியர்ஸ்) கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கொடுக்க மறுப்பதைக் கண்டித்து
ம், அற்ப காரணங்களைக்காட்டி ஊழியர்களை  தற்காலிக பணி நீக்கம் மற்றும் வேலைநீக்கம் செய்வதை கைவிடுதல், 2013ம் ஆண்டில் இருந்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள  கிராமிய ஆயுள் காப்பீடு ஊக்க தொகையை வழங்குதல், இலாகா ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் போனஸ் மற்றும் பஞ்சப்படியை அதே  நாட்களில் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம்  சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கோட்டை தபால் நிலையம் முன்பு தலைவர் அடைக்கலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர்  சூரியபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கரூர் கோட்டம் சார்பில் நேற்று மாலை கரூர்  தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் சங்க செயலாளர் கருணாநிதி தலைமையில் நடந்தது. 

பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார். இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  சங்க நிர்வாகிகள் கூறுகையில், தொடர்ந்து கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில்  ஊழியர்கள் வேலைநிறுத்தம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive