NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்ஜி., பொது கவுன்சிலிங்: கம்ப்யூ., சயின்சுக்கு கிராக்கி 'நீட்' தேர்வால் காலியிடம் குறைய வாய்ப்பு

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 1.75 லட்சம் இடங்களுக்கு பொது கவுன்சிலிங் நேற்று துவங்கியது. 
 
முதல் நாளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவுகளுக்கு, மாணவர்கள் முன்னுரிமை கொடுத்தனர்.

அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரி களில், இன்ஜி., படிப்புக்கான கவுன்சிலிங், ஜூலை, 17ல் துவங்கியது. முதலில் தொழிற் கல்வி, மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டு பிரிவுக்கு, மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்று முதல் கவுன்சிலிங் துவங்கியது. மொத்தம், 518 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 339 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதில், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 197 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.நேற்று முதல் நாளில், 2,898 பேர் அழைக்கப்பட்டனர்.

முதல் அமர்வுக்கு அழைக்கப்பட்ட, 162 பேரில், 116 பேர் பங்கேற்றனர். பெரும்பாலானோர்,
அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி, கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லுாரிகளையும் தேர்வு செய்தனர்.

பெரும்பாலான, 'டாப்பர்ஸ்' மாணவர்கள், மெக்கா னிக் படிப்பை விட, கம்ப்யூ., சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்கம்யூனிகேஷன்ஸ் படிப்புகளையும், சிலர், சிவில் இன்ஜி., படிப்புகளையும் தேர்வு செய்தனர்.

கிண்டி இன்ஜி., கல்லுாரியில் முதல் நாளே, இந்த நான்கு பிரிவுகளிலும், பெரும்பாலான இடங்கள் நிரம்பின.இந்த ஆண்டு, மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வால், மருத்துவ கவுன்சிலிங் எப்போது என, தெரியாத நிலை உள்ளது. அது போல், மருத்துவத் துக்கான, 'நீட்' தேர்வில், பெரும்பாலான மாணவர் கள், போதிய மதிப்பெண் பெறவில்லை.அதனால், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற, கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள், பெரும் பாலும், இன்ஜி.,படிப்பை தேர்வு செய்கின்றனர்.

இது குறித்து, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் கூறுகையில், ''மருத்துவ படிப்பில், 'நீட்' பிரச்னை இருப்பதால், இந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள், இன்ஜி.,படிப்பை நம்பிக்கையாக எடுத்துள்ளனர். அதனால், முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது,'' என்றார்.

'டாப்பர்ஸ் சாய்ஸ்'

இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற, முதல் மாணவர்களில் நேற்று, நான்கு பேர் இன்ஜி., கவுன்சிலிங்கில் இடம் தேர்வு செய்யவில்லை. நேற்றைய கவுன்சிலிங் கில் முதல், 10 இடங்களில், முன்னேறிய பிரிவை சேர்ந்த இரண்டு பேர், பிற்படுத்தப்பட் டோர் வகுப்பில், ஏழு பேர் மற்றும் ஒரு முஸ்லிம் மாணவர் இடம் பெற்றனர்.இவர்கள், 200க்கு, 200, 'கட் ஆப்' மதிப்பெண் எடுத்ததால், ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இல்லாத, பொதுப்பிரிவில் இடங்களை பெற்றனர்.

அவர்களில், ஒன்பது பேர், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி யையும், ஒருவர், கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியையும் தேர்வு செய்தனர். பாடப் பிரிவை பொறுத்தவரை, ஐந்து பேர், கம்ப்யூ., சயின்ஸ்; மூன்று பேர், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்; ஒருவர், எலக்ட்ரிகல்; ஒருவர், சிவில் பிரிவுகளையும் தேர்வு செய்தனர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive