NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய 51 ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் 96 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நேற்று நடந்தது. 

விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களும், விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய 51 ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு பெறும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் இருக்கும்.

சீருடைகள் மாற்றம்

அரசு பள்ளிக்கூட சீருடைகள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு வருகிற கல்வி ஆண்டில்(2018-2019) மாற்றப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்தில் சீருடைகளும், 6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மற்றொரு நிறத்திலும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வேறு ஒரு நிறத்திலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்-மாணவிகளுக்கு இன்னொரு நிற சீருடைகளும் என்று 4 வகையாக மாற்றப்பட உள்ளது. இதுபற்றி ‘தினத்தந்தி’ நாளிதழிலும் பள்ளிக்கூட சீருடைகள் மாறுகிறது என்று செய்தி வந்தது.

1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் வழங்கப்படுகிறது. 9-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் 20 அல்லது 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்கள் 51 பேருக்கு இங்கே சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த வருடம் விடுமுறை எடுக்காமல் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் என்று உயரவேண்டும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் புதிய பாடத்திட்டம் குறித்து 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரவேற்பு

விழாவில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், விருகை ரவி எம்.எல்.ஏ., பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆர்.இளங்கோவன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் சேதுபதி, நாகராஜ முருகன், ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் தொடக்கப்பள்ளி இயக்குனர் கருப்பசாமி வரவேற்றார். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive