NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்குக் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து ஜனவரி 23ஆம் தேதி அன்று சிஐடியு மற்றும் பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டன. இதனையடுத்து ஜனவரி 22ஆம் தேதியன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர்நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்ட இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து சிஐடியு உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதனால், பெரிதளவில் அரசுப்பணிகள் பாதிக்கப்படவில்லை என்றாலும் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில், தற்போது 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 22ஆம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive