NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உபரியாக, 16 ஆயிரம் பேர் :புதிய ஆசிரியருக்கு வேலை இல்லை

''பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால்,
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், காலை, 7:00 மணிக்கு சென்று, இரவு, 8:00 மணிக்கு, வீடு திரும்புகின்றனர். அங்கு, அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர். மாணவர்கள், கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: இப்புகார் குறித்து, துறையில் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பிரின்ஸ்: அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.


பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம், நன்கொடை வசூலிக்கப்படுகிறது.செங்கோட்டையன்: தனியார் பள்ளிகளின், கட்டணங்களை வரைமுறை செய்வதற்காக, குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின், கட்டண விபரங்கள், முன்னர், தலைமை ஆசிரியர்களின் அறைகளில் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, பெற்றோர்கள் அறியும் வகையில், பள்ளி வளாகத்தில், கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.பிரின்ஸ்: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடனடியாக, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, அதற்கு மேல், ஆசிரியர்களை நியமிக்க இயலாது.இவ்வாறு, விவாதம் நடந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive