NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முதலமைச்சர் அவர்களின் இன்றைய அறிவிப்பு!

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நீட்
தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – நாள்: 21.03.2020


மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி , தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை 2016 - 17ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது . மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீவிர முயற்சியினால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து அந்த ஆண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது .

மாண்புமிகு அம்மாவின் அரசும் , பொது மக்களும் , தமிழ்நாடும் , நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றோம் . 31 . 1 . 2017 அன்று , நீட் தேர்வினை எதிர்த்து ஒரு சட்டமுன்வடிவினை இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி , மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . அதே வேளையில் , இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களை , குறிப்பாக கிராமப்புற ஏழை , எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி , உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு , மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடப்பட்டும் வருகிறது . நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு , அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது . இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது .

மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றது . இது மட்டுமல்லாமல் , அரசுப் பள்ளிகள் , மாநகராட்சி பள்ளிகள் , நகராட்சி பள்ளிகள் , ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நலப் பள்ளிகள் , கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள் , வனத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் , 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற மாண்புமிகு அம்மாவின் அரசு பரிசீலித்து வருகிறது .

இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க , ஓய்வுபெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் , ஒரு ஆணையம் அமைக்கப்படும் . அந்த ஆணையத்தில் , பள்ளிக் கல்வி , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை , சட்டம் ஆகிய துறைகளின் அரசுச் செயலாளர்களும் , பள்ளிக் கல்வித் துறையினால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் . மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர் - செயலராக செயல்படுவார் . மேற்கூறிய பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து , அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து , இந்நிலையை சரி செய்ய , மாண்புமிகு அம்மாவின் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும் . தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை - 9




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive