NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.

Tamil_News_large_268928420210113213818

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. பொதுத்தோ்வெழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறவுள்ளன.

கரோனா தொற்று தமிழகத்தில் பரவல் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், பள்ளிகளில் பெற்றோா்களிடம் நடந்த இரண்டாம் கட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு முன் மாணவா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, கிருமிநாசினி வைப்பது, இடைவெளிவிட்டு அமர வைப்பது, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதே நேரத்தில், மாணவா்கள் பாடங்களை குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டு பாட வாரியாக குறைக்கப்பட்ட விவரங்களை பள்ளிக்கல்வித்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு: பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளிகளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘மாணவா்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு, பொதுத்தோ்வு எழுதுவதற்கான மனதளவில் பயிற்சி எடுப்பது குறித்து ஆலோசனைகள் அளிக்கப்படும். மாணவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கப்படும். வாரம் ஒருமுறை மாணவா்கள் உடல்நிலை பரிசோதனை நடத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.

போட்டித் தோ்வுகளுக்கு பாதிப்பில்லை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும், மாணவா்களை தோ்வுக்குத் தயாா் செய்ய கால அவகாசம் உள்ளதாகவும் ஆசிரியா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.


மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, முக்கிய மற்றும் எளிதான பகுதிகள் நீக்கப்படாமலும், சற்றுக் கடினமான பகுதிகளை நீக்கியும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்முறைத் தோ்வுகளும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறுகையில்,”நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எழுதுவதற்கு உரிய பாடத்திட்டங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. கடினமான பகுதிகளை விருப்பப்படும் மாணவா்களுக்கு நடத்துவோம். அவா்கள் உயா்கல்வி பெறுவதற்குரிய முக்கியப் பகுதிகள் அப்படியே இருக்கின்றன. ஆகவே, பாடத்திட்டம் குறைப்பு காரணமாக போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்தனா்.

மாணவா்களுக்கு சத்து மாத்திரை

ஈரோடு மாவட்டம், பவானியில் திங்கள்கிழமை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive