NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.21

    

 

திருக்குறள் :

குறள்: 

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடக்கப் பெறின். 

பொருள் :

அடக்கத்துடன் வாழ்வதே பெருமை தரும் என்று ஒருவன் அறிந்து அடக்கத்துடன் வாழ்ந்தால் அவன் அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அவனுக்கு நற்பெயரை பெற்று தரும்

பழமொழி :

A fog cannot be dispelled with a fan


சூரியனை கையால் மறைக்க முடியுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.-----ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது எது? 

நிலக்கரி 

2. பச்சை தங்கம் என்று அழைக்கப்படுவது எது? 

காடுகள்

English words & meanings :

Penny Pincher - a person who is unwilling to spend, தேவைக்கும் செலவழிக்க மனம் அற்றவர், 

big-headed - an arrogant person - அகங்காரம் கொண்ட மனிதர்

ஆரோக்ய வாழ்வு :

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்


அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள்.

சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

அதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது.

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும்.

இப்படி தினமும் குடித்து வந்தால், கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.

  • வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.
  • சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
  • வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
  • வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
  • வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
  • நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.

கணினி யுகம் :

Ctrl + [ - Decrease selected font -1. 

Ctrl + shift + < - Decrease selected font -1.

நவம்பர் 10

மிக்கைல் கலாசுனிக்கோவ் அவர்களின் பிறந்தநாள்... 





மிக்கைல் கலாசுனிக்கோவ் (லெப்டினன்ட் ஜெனரல் மிக்கைல் டிமோபெயெவிச் கலாஷ்னிக்கோவ்Mikhail Timofeyevich Kalashnikovரசிய மொழி: Михаи́л Тимофе́евич Кала́шников, நவம்பர் 10, 1919 - டிசம்பர் 23, 2013) உருசிய சிறு படைக்கலன்களை வடிவமைத்தவர், இவர் வடிவமைத்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றது ஏ கே 47 வகை எந்திரத் துப்பாக்கியாகும். இவரை கலாஷ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பர்.

மார்ட்டின் லூதர் அவர்களின் பிறந்தநாள்... 




மார்ட்டின் லூதர் (Martin Lutherநவம்பர் 101483பெப்ரவரி 181546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.

நீதிக்கதை

அரசவை விகடகவியாக்குதல்

ஒருநாள் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் கூடியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். 

மன்னர் கிருஷ்ணதேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேறூரிலிருந்து வந்த தத்துவஞானியைப் பார்த்து விழாவைத் தொடங்கி வைத்து, விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். 

தத்துவஞானி இறுதியில் மாய தத்துவம் பற்றி பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். தெனாலிராமன் எழுந்து நின்று. ஐயா நாம் உண்பதற்கும், உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா? என்றார். 

வித்தியாசம் இல்லை என்றார். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டனர். 

தத்துவஞானி தன் தவறை உணர்ந்தார். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி, பரிசளித்து, அன்றிலிருந்து அவரை அரசவை விகடகவி ஆக்கினார்.

இன்றைய செய்திகள்

10.11.21

◆தமிழகத்துக்கு ரெட் அலர்ட்; நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

◆நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது உடனடி நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

◆தமிழகத்தில் டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை: சுகாதாரத் துறை அமைச்சர்  தகவல்.
 
◆2020ஆம் ஆண்டு 141 பேருக்கும், 2021-ஆம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் 2-வது நாளாக நேற்றும் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது.


◆20 மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் பயண கட்டுப்பாடுகள் நீக்கம்: இந்தியா, பிரிட்டன், கனடா நாட்டினர் வர அனுமதி.

◆பார்முலா 1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி.

◆மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் : சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய பிரிஸ்மென் ஹீட்.


Today's Headlines

🌸 Red Alert for Tamil Nadu;  Chance of heavy rain tomorrow and the day after tomorrow: Indian Meteorological Department announcement.

🌸 Immediate action on watershed encroachments: Chennai High Court order.


 🌸 Central Committee visits to study dengue impact in Tamil Nadu: Information from the Minister of Health.
 
 🌸The Padma Awards were announced for 141 people in 2020 and 119 people in 2021 and the second day of the Padma Awards ceremony was held yesterday as the event was not held due to corona.

 🌸 Travel restrictions are lifted off in the United States after 20 months: India, the UK, Canada people are given permission to come.

🌸 Formula 1 car racing: Dutchman Verstappen won.


 🌸 Women's Big Bash 20 Over Cricket: Prismen Heat Beat Sydney Sixers.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive