NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

 .com/

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அந்தமானில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 13ம் தேதி அதாவது நாளை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் நவம்பர் 14ஆம் தேதி நெல்லை குமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கில் தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகரக்கூடும். மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் மழை பெய்ய  வாய்ப்புள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive