வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சி துறை , வேலைவாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011
ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின்
மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு
செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்தது இந்நிலையில் மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களின் செயலாளர் -3 அவர்களால் 6,6.2022 தெரிவிக்கப்பட்டபடி
நிகழ்நிலையாக அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்ட முடிவில் வேலைவாய்ப்பு
இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை
கைவிடப்படுகிறது . மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு
நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவட்டை
வழங்கப்பட வேண்டும் . மேலும் நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணைய தளமான www.tnvelaivaaippu.gov.in
" -ல் அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக
மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம் என்பதையும் வேலைவாய்ப்பு பதிவுகள் ,
கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை " இ சேவை " வாயிலாக செய்து
கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அவ்வசதியினையும் விருப்பம்
உள்ளவர்கள் பயன்படுத்திகொள்ளலாம் என்ற விவரங்களை அனைவரும் அறியச் செய்யும்
வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்களுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Public Exam Questions 2024
NEET Coaching Centre
Latest Updates
Home »
Padasalai Today News
» வேலைவாய்ப்பு இணையதளத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியை, மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது என அறிவிப்பு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...