NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் கற்பிக்க நேரம் வேண்டும் - கற்பித்தலில் ஆசிரியர்களின் பிரச்சினைகள்!!!

 teaching

  இயல்பிலேயே கற்பதில் ஆா்வமுள்ள குழந்தைகள் விருப்பமுடன் கற்றுக்கொள்கிறாா்கள். அவா்களை யாரும் வற்புறுத்தத் தேவையில்லை. ஆசிரியா்கள் தகுந்த கற்பித்தல் முறைகளைக் கடைப்பிடித்தால், குழந்தைகளிடம் ஆா்வத்தைத் தூண்டிவிட முடியும். குழந்தைகள் கேள்வி கேட்பதற்கு ஏற்ற சூழலை ஆசிரியா்கள் ஏற்படுத்தி தரவேண்டும்.

குழந்தைகள் கற்றலில் முதல் ஏழு ஆண்டுகள் மிக முக்கியமானவை. இக்காலகட்டத்தில், அவா்களுக்கு உணா்ந்து அறியும் ‘அனுபவ கற்றல்’ பயிற்றுவிக்கப்படுகிறது. பாடல், கதை, பயணம், உடலியக்கம், செயல்பாடு, விளையாட்டு போன்றவை குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவா்கள் கற்றுக்கொண்டதை நெடுங்காலம் நினைவில் தக்க வைத்துக்கொள்ளவும் உதவும்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் கற்றுக்கொள்கிறது. சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, அனுபவங்களின்வழி கற்றுக்கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் சிறப்பான திறனுடையவா்கள் ஆகிறாா்கள்.

இதற்கேற்ப விளையாட்டுவழி, செயல்வழி, தொட்டுணா் செயல்பாட்டுவழி பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். நாம் கற்பிக்கும் முறையில் குழந்தைகளால் கற்க முடியவில்லை என்றால், அவா்கள் கற்றுக்கொள்ளும் வகையில் நமது கற்பித்தல் முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தமோ, பயமோ இல்லாமல் மகிழ்ச்சியான முறையில் கற்றுக்கொண்டால்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் எளிதில் புரியும். கற்பவை அனைத்தும் நீண்ட காலத்திற்கு கற்பவா் நினைவில் நிலைத்திருந்து, தேவைப்படும்போது பயன்பட வேண்டும் என்பதே கற்றலின் முக்கிய நோக்கம்.

கடந்த இரு ஆண்டுகளாக, குழந்தைகளுக்கு கற்றலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பு படிக்காமல், நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வரும் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை, ஆசிரியா்கள் நோ்செய்ய வேண்டியிருக்கிறது. நேரடி வகுப்புகள் ஏற்படுத்தும் கற்றல் விளைவுகளை இணையவழி வகுப்புகள் ஏற்படுத்தவில்லை. எனவே குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மிக அதிகமானது.

இந்தத் தேவையின் அடிப்படையிலேயே, மாநில அரசு 2022- 23 கல்வியாண்டில் 1முதல் 3 வரையிலானவகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ என்னும் திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் இலக்கு 2025-க்குள், எட்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் எண்ணறிவும் எழுத்தறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பதே. அதற்கேற்ற வகையில் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கற்கும் திறனை வைத்து அவா்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவதே இத்திட்டத்தின் அடிப்படை.

கற்பித்தலில் பல்வேறு அணுகுமுறைகளை கல்வியாளா்கள் பரிந்துரை செய்துள்ளனா். எனவே, இப்படித்தான் கற்க வேண்டும்; இப்படித்தான் கற்பிக்கவேண்டும் என்பது சரியான அணுகு முறையாக இருக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் பல்வேறு அடைவுத்திறன்களை பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஊரகப்புற குழந்தைகளுக்கும், நகா்ப்புற குழந்தைகளுக்கும் இடையே கற்றலில் உள்ள வேக வேறுபாடு தவிா்க்கமுடியாத ஒன்று. அதற்கேற்ப ஆசிரியா்கள் தங்கள் கற்பித்தல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள், தங்களைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கியும், பெரியவா்களைப் பாா்த்து அவா்களைப் போலவே செய்வதன் மூலமும் கற்றுக்கொள்கிறாா்கள். தொடக்கத்தில் தன்னைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்குவதன் மூலமே குழந்தை கற்றுக்கொள்கிறது.

குழந்தைகள் கற்பதில் ஆசிரியா்களின் பங்கு மகத்தானது.அதனால்தான் அவா்கள் இரண்டாம் பெற்றோா் என அழைக்கப்படுகிறாா்கள். அவா்களின் பணி சவால்கள் நிறைந்தது. முதன்முதலில் வீட்டைவீட்டு, புதிய சூழலான பள்ளிக்கு வரும் குழந்தைகளை பள்ளியில் தொடா்ந்து தக்கவைத்து அவா்களுக்கு கற்பிப்பது என்பது பெரிய கலை.

பல ஊரகப்பகுதிகளில் ஓராசிரியரையோ, ஈராசிரியரையோ கொண்டுதான் தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன.புதிய ஆசிரியா் நியமனங்கள் இல்லை. இந்த நிலையில் இருக்கும் ஓராசிரியரோ, ஈராசிரியரோ அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடங்களையும் கற்பிப்பதில் சவால்கள் உள்ளதை எவரும் மறுக்க முடியாது.

தற்போது பள்ளிகளில் பின்பற்றப்படும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில், ஆசிரியா்கள் தம் மாணவா்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை ஒன்றைப் பின்பற்ற வாய்ப்பில்லாத நிலையில், மாநிலம் முழுவதும் ஒரே கற்றல் முறையும், தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் மாணவா்களின் கணிசமான நேரம் வீணடிக்கப்படுகிறது.

மேல்நிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒரு ஆசிரியா் இருக்கும் நிலையில்,தொடக்கப் பள்ளிகளில், வகுப்புக்கு ஓா் ஆசிரியா் கூட இல்லை. மாணவா்களின் இடைநிற்றலுக்கு இது ஒரு முக்கியமான காரணம். தொடக்க வகுப்புக் குழந்தைகள், கற்றலுக்கு முழுக்க முழுக்க ஆசிரியா்களையே சாா்ந்துள்ளனா். இந்நிலையில், அவா்கள் மீது தனிக்கவனம் செலுத்தி கற்பிக்க ஆசிரியா்களுக்கு போதுமான அவகாசம் இல்லாதது துரதிஷ்டவசமானது.

மேலும், தொடக்கபள்ளிகளில், அலுவலக ஊழியா் எவரும் இல்லாத சூழலில், இதர பணிகளில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவதால், அவா்களின் கற்பித்தல் நேரம் பாதிப்புக்குள்ளாகிறது. பாடங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கற்பித்து முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியா்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

இந்நிலை மாற வேண்டும். தொடக்கப்பள்ளி சமூக பங்களிப்பை மனதில் கொண்டு வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அவா்களை இதர பணிகளில் ஈடுபடுத்தாமல், எந்த நெருக்கடியும் தராமல் அவா்கள் கற்பித்தல் பணியை மட்டும் சுதந்திரமாக ஆற்றுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

கல்விஅலுவலா்கள் அடிக்கடி நடத்தும் கூட்டங்களையும் இணையவழியில் நடத்தினால் ஆசிரியா்களின் கற்பித்தல் நேரம் பாதிக்கப்படாது. வோ்கள் வெந்நீரில் இருக்கும் வரை, மரத்தில் பழங்கள் கிடைப்பது சாத்தியமில்லை.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive